Saturday, December 19, 2009

சலாம்

பொதுவாக ஒரு காக்கிச்சட்டை,
இன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் ( salute ) செய்வது வழக்கம்.

இன்றும் ஒரு காக்கிச்சட்டை,
இன்னொரு காக்கிச்சட்டைக்கு சலாம் செய்தது,
வெறும் நான்கு ரூபாய் டிக்கெட்டிற்காக.



( நான்கு ரூபாய்க்காக ஒரு காவல்துறை அதிகாரி
காலை 5 மணிக்கெல்லாம் நடத்துனரின் பல்லில் நிற்கவேண்டுமா?
எனக்கே கேவலமாக உள்ளது...
அவங்களுக்கு எதுவுமே இருக்காதா???

நம்மில் பலபேர் சில சமயங்களில் சில அல்ப சலுகைகளுக்காக கண்டவர்களிடம் மானத்தை அடகு வைக்கின்றோம் .

சிந்திப்போம் ஏனெனில் நாம் தமிழர்கள் )

Friday, December 4, 2009

1 : 40

நேத்து அம்மா வாங்கிட்டு வந்த பச்சரிசி கிலோ 1 ரூபாய் ,

இன்னைக்கி அண்ணா வாங்கிட்டு வந்த பச்சரிசி கிலோ 40 ரூபாய் ,

ரெண்டுமே மண்ணுல தானுங்களே வெளையுது,

எதை ஊரவெச்சி, இடிச்சாலும் மாவுதானுன்களே வரும்,

ரெண்டுத்தளையும் ஒரே அளவு கார்போஹைட்ரடேட் தானுங்களே இருக்கு,

அப்புறம் ஏங்க இவ்வளவு விலை வித்தியாசம்?

எனக்கு புரியவில்லைங்க - இந்த 1 : 40 (ரேஷன் : மார்க்கெட்) கணக்கு ,

புரிஞ்சவுங்க சொல்லிதாங்க...

- நான் இல்லை ( என்னை போன்ற பலபேர் )



( ஒரு ரூபாயில் பசி ஆற்றமுடிகிறது,
ஆனால் நல்ல சாப்பாடு? )

Tuesday, December 1, 2009

போரூரும் காக்கையும்...

நீங்கள், மதியம் ஒரு 2 மணிக்கு அவசரமாக வெளியூர் போக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம் .
நல்ல பசி உங்களுக்கு.
பேருந்து நிலையத்தில் ஒரு biscuit packet வாங்கி கொள்கிறிர்கள்.
பேருந்தில் ஏறியவுடன் சாப்பிட்டுவிடீர்கள். காலியான அந்த biscuit cover-ஐ என்ன பண்ணுவிங்க?????

இது தான் என் கேள்வி.


ஜன்னல் வழியே தூக்கிபோடுவீர்கள் என்றால், கிழ்கண்ட நிலை உருவாக நீங்களும் ஒரு முக்கிய காரணம்.





ஒவ்வொரு ஊரின் எல்லைகளிலும் ஊரின் பெயர் பலகை நம்மை வரவேற்கின்றதோ இல்லையோ, இந்த மட்காத plastic குப்பைகள் தான் நம்மை வரவேற்கும். அது பெரிய நகராட்சியாக இருந்தாலும் சரி, இல்லை சின்ன கிராமமாக இருந்தாலும் சரி. அந்தந்த ஊரின் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு குப்பைகளின் அளவு இருக்கும்.

காலி மனைகளில், மின்சார கம்பத்தின் அருகில், கோவில்களின் அருகில், கடைதெருவில், மருத்துவமனைகளின் பக்கத்தில், எங்கு நோக்கினும் பிளாஸ்டிக் கழிவுகள்.

எல்லாமே use and throw தான்.
நாம் போடும் குப்பைகளின் நிலை பற்றி ஒரு கவலையும் இல்லை நமக்கு. தயவு செய்து கொஞ்சம் அவற்றின் நிலை பற்றி எண்ணிபாருங்கள்.

பஸ்ல வாங்கற டிக்கெட்-ல இருந்து, ATM bills, ice cream cover, cigarette cover, biscuit cover, chocolate cover (மன்னிக்கவும்) இவை எல்லாம் நாம் ஒருவர் மட்டும் தினசரி வெளியில் தூக்கிபோடும் குப்பைகள்.


( மூணாரில் எடுக்கப்பட்டது )


ஒருவரால் மட்டும் இவ்வளவு என்றால்?
யோசித்து பாருங்கள், நம் நாட்டில் உள்ள ஒவ்வொருவராலும் தினமும் எவ்வளவு குப்பைகள் பொறுப்பில்லாமல் மிக சாதாரணமாக வெளியில் தூக்கி எறியப்படுகின்றது என்று.

நான் பார்த்ததிலேயே மிகவும் மோசமான இடம் போரூர் (சென்னை). ஒரு பிளாஸ்டிக் மலையே நம்மை வரவேற்கும். அதிலும் ஒரு முக்கியமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கால் வைக்கவே முடியாத இடத்தில், அதாவது குப்பை மேட்டின் நடுவில் அங்கு மாட்டிறைச்சி விற்று கொண்டிருப்பார்கள். பேருந்தில் இருந்து பார்க்கவே சகிக்காது. நீங்கள் போரூர் வந்திருந்தால் தெரியும், அங்குள்ள குப்பைகளையும், காக்கைகளையும்.




அழகான இந்த பூமியை, சகிக்க முடியாத இடங்களாய் மாற்றியது யார்?

நாம்.
நாம்.
ஆறறிவு கொண்ட நாம் மட்டும் தான்.

இந்த குப்பைகளையும், இந்த இடங்களின் தலைஎழுத்தையும் நம்மால் மாற்றமுடியும். நம்மால் முடியாதது என்று உலகில் ஒன்றும் இல்லை.

பிறரை சொல்லி குற்றம் இல்லை. மாற்றம் நம்மிடம் இருந்து உருவாகட்டும். நம் முதுகில் உள்ள அழுக்கை முதலில் அகற்றுவோம்.

1. முறையான இடங்களில் குப்பைகளை போட கற்றுகொள்வோம்.

2. இனி ஒவ்வொரு முறை நீங்கள் குப்பைகளை குறிப்பாக பிளாஸ்டிக் குப்பைகளை போடும்போதும் சரியான இடத்தில் தான் போடுகிறோமா என்று ஒரு பொறி தட்டட்டும்.

3. உங்கள் வீட்டில் இருந்து வெளியாகும் குப்பைகளை எங்கு, எப்படி வெளியேற்றுகின்றிர்கள் என்பதை பாருங்கள்.

4. நீங்களோ அல்லது உங்கள் வீட்டாரோ திறந்த வெளியில் கொட்டினால் தயவு செய்து அந்த முறையை மாற்றவும்.

5. மட்கும் குப்பையை வீட்டின் வெளியில் ஒரு குழி தோன்றி அதில் கொட்டலாம். ( இப்போது என் வீட்டில் உள்ள மட்கும் கழிவு குழியில் ஒரு மாங்கன்று முளைத்துள்ளது :-) )

6. சாதாரண தினசரி காலண்டர் பேப்பர் முதல், plastic cover, அட்டைகள் எல்லாவற்றையும், வீட்டிலேயே ஒரு குப்பைத்தொட்டி ஏற்பாடு செய்து, அவற்றில் நிரப்பி, பின் முறையான வழிகளில் அப்புறபடுத்துங்கள்.

பிளாஸ்டிக் கழிவுகளை முறையாய் அப்புறபடுத்தும் வழிகளை வேறொரு பதிவில் பார்ப்போம்.

(சில நகராட்சிகளே சேகரிக்கும் குப்பைகளை, முறையான வழியில் அப்புறபடுத்தாதது வேதனைக்குரிய விஷயம்.)

சரி, இப்பொழுது முதலில் ஆரம்பித்த செய்திக்கு வருவோம். ஒருவேளை அந்த biscuit cover - இல் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் மீதம் இருந்தால் அப்படியே மடித்து பையில் வைத்து வீட்டுக்கு கொண்டுபோகும் நாம், ஏன் காலியான கவரையும் பையில் வைத்து வீட்டுக்கு கொண்டுபோய் குப்பை தொட்டியில் போடகூடாது.
வேடிக்கையாகத்தான் இருக்கும். ஆனால், இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்ய தவறி தான் மிகப்பெரிய குப்பை மலைகளை உருவாக்கியுள்ளோம்.

கொஞ்சம் மண்ணையும் நேசிப்போம்,
தயவு செய்து கொஞ்சம் பிறர் மண்ணையும் நேசிப்போம்.


( சொல்லனும்னு தோணிச்சு சொல்லிவிட்டேன் , பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். சுற்றுச்சுழல் பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னுடன்களாய் பகிர்ந்தால், பிறரும் பயன்பெறுவார்கள், மண்ணும் சுத்தமாகும் )