Wednesday, May 26, 2010

இரு வேறு ஊமைகள் ..















எப்போதுமே அழுக்காய் இருக்கும் பேருந்து நிலையம்,
எப்போதாவது சுத்தம் செய்யப்படும் டீலக்ஸ் பஸ்,
நேத்து பார்த்த அதே பிச்சைக்கார தாத்தா,
அதே 'அம்மா' என்னும் குரல்,
நேற்று சட்டென காசெடுக்க உள்ளே போன 'கை'
இன்று போக மறுத்தது
மூளையின் கட்டளைக்கு இனங்க
கண்கள் பேருந்தின் உள்ளே திரும்பின.
உள்ளே,
வேறோரு தம்பி தன்னை ஊமை என
துண்டு சீட்டினால் விளம்பரம் செய்து கொண்டிருந்தான்
என் மீதும் துண்டு சீட்டு விழுந்தது
திரும்பி வந்து நின்றவன்,
வாய்திறந்து நாக்கை காட்டினான்,
அறுபட்டது போலவே இருந்தது.
ஏற்கனவே இது போல் நிறைய பேரை பார்த்து இருந்தாலும்
மனதின் கட்டளையால் 'கை' காசெடுக்க போனது,
சில்லரையை கொடுத்தேன்...
வாங்கினான், கடனை வசூலிப்பவன் போலவே
பேருந்தின் கீழே இறங்கியவனை பார்த்துக்கொண்டே இருந்தேன்.
யாரிடமோ,
பேசினான் அவன்.
ஊமையை நான்.


( மூளை சில சமயம் ஊமையாய்,
மனம் சில சமயம் ஊமையாய்... :-) )

Friday, May 21, 2010

அவள் ஒரு தேவதை - 1

பொதுவாக ஆண்களைவிட பெண்கள் ஒரு நாளைக்கு பேசும் வார்த்தைகள் மிக அதிகம், ஒரு சிலரைத் தவிர.

சமீபத்தில் ஒரு தேவதையை சந்திக்க நேர்ந்தது.

நேர்காணல் முடித்துவிட்டு, நானும், என்னுடன் முன்சுற்றில் தேர்வான, என் கல்லூரி தோழி சரண்யாவும் (அவளையே முன்னாள் தான் தெரியும் :-) ) புல்லு புடிங்கிக்கொண்டு இருந்தோம்.

முடிவுகள் ஆறுமணிக்கு தான் என்று தெள்ளத்தெளிவாக சொல்லிவிட்டார்கள். அப்போது மணி 11:00 . கொண்டுவந்த சாப்பாட்டை உள்ளே ஏற்கனவே தள்ளிவிட்டதால்,
"வா.. கனி.. ஏதாவது விளையாடலாம்" என்றாள் சரண்யா.

என்னுடைய எண்ணமெல்லாம் நான் சரியாக நேர்காணலை செய்தேனா? நிறை குறைகள் என்ன? என்பதிலேயே சுற்றிக்கொண்டு இருந்ததால், மெல்ல அவளை பார்த்து என்ன விளையாடலாம் என்றேன், என் குரலில் சிரத்தை இல்லாதது எனக்கே தெரிந்தது.
அவள் என்ன நினைத்தாளோ தெரியவில்லை. " கடவுளே இன்னும் கிட்டத்தட்ட எழு மணி நேரம் எப்படி தான் ஓட்ட போறோமோ? , நல்லவேளை இப்படி அழகாய் உட்கார புல் தரையாவது இருக்கு " புற்களின் நுனிகளை ஓயாமல் கிள்ளிக்கொண்டு இருந்தேன்.
" ம்ம்ம்... ஓடிபுடிச்சி விளையாடலாமா? " என்றாள் அவள்.
கடுப்பாகி, ஒரு முறை அவள் கண்களை பார்த்துவிட்டு, "எங்க, இங்க உனக்கு ஓடி புடிச்சி விளையடுனுமா?" என்றேன்.
என் கடுப்பில் அவள் சிரித்துவிட்டாள்.
முன்னாள் ஆவது திருவிழா மாதிரி இருந்தது அந்த கல்லூரி, என் உயிர் தோழி சாய் கூடவே இருந்ததால், வேடிக்கை பார்த்துக்கொண்டே, அந்த கல்லூரியை சுற்றிகொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை.
ஆனால் இன்று, வெறும் 150 பேர் மட்டுமே. அந்த கல்லூரியின் கட்டிடத்தில் நாங்கள் வெறும் எறும்புகள் போலவே காட்சி அளித்தோம்.

சரண்யாவுக்கு நேர்காணல் 'விண்ணைத்தாண்டி வருவாயா' திரைப்பட கதையில் போய் முடியவே, ஏகமாய் புலம்பிக்கொண்டு இருந்தாள்.
அப்போதைக்கு, சரண்யாவும், அடிக்கடி வரும் குறுஞ்செய்திகளும் மட்டுமே எனக்கு கொஞ்சம் ஆறுதலாய் இருந்தது.

கண் அயரும் நேரத்தில் "ஹாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்" என்று ஒரு பெண்ணின் குரல்.
யாருடா அது என நிமிர்ந்து பார்க்கையில் அவளே தான், பெயரை மறந்து இருந்தேன், நேற்று முன் சுற்றிற்கான முடிவுகளை வெளியிட்ட பின் ஒரு அறைக்கு செல்லுமாறு அறிவுருதப்படோம்.

அப்போது தான், அவளை முதன்முதலாய் பார்த்தேன். பரஸ்பரமாய், பெயரையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டோம். அவ்வளவுதான்.

அடுத்த சந்திப்பிலேயே இவ்ளோ பெரிய ஹாய் நான் எதிர் பார்த்திராதது.
"ஹைய்யோ........ ஆறு பேர் கிட்ட இருந்து மிஸ்டு கால்".... என்று சொல்லிக்கொண்டே செல் போனில் முழ்கிகினாள். பேசிக்கொண்டே கையில் வைத்து இருத்த file - ளையும், ஒரு பெரிய purse -யும் நீட்டினாள். வாங்கி கீழே வைத்தேன். பையை கீழே போட்டுவிட்டு. பேச்சு சுவாரசியத்தில் புள் தரையில் நடந்து, நடந்து பேசிக்கொண்டு இருந்தாள்.

"உன்னோட ப்ரிண்டா கனி??" என்றாள் சரண்யா.

ஆமாம் என தலையை ஆட்டினேன்.

ஒரு வழியாய் எல்லோரிடமும் பேசிவிட்டு நாங்கள் இருந்த இடத்தில் வந்து அமர்ந்தாள்.

"எப்படி போச்சு இண்டர்விவ்?" என்றேன்.

"நாளு பேரும்மா, அதுல ஒருத்தன் கேட்டான், நைட் ஷிபிட்க்கு வருவியானு, நான் சொன்னேன் எஸ் சார், அப்புறம் பக்கத்துல இருந்தவன் கேட்டான், தொடர்ந்து நைட் ஷிப்ட்டே... போட்டா வருவியான்னு, நான் சொன்னேன் எஸ் சார், அவனுக்கு பக்கத்துல இருந்தவன் கேட்டான் மூணு ஷிப்ட்டுமே தொடர்ந்து வொர்க் பண்ண சொன்னா செய்வியான்னு, நான் சொன்னேன் எஸ் சார். நானும் எவ்ளோ நேரம் தான் நானும் வலிக்காத மாதிரியே நடிக்கறது கனி , முடியல... " என்று முடித்தாள்.

"உனக்கு எப்படி" என்றாள்.

"எனக்கு formal ஆக தான் இருந்தது" என்றேன்.

சரண்யாவை விசாரிக்க, மறுபடியும் 'விண்ணைத்தாண்டி வருவாயா' கதை ஓடியது...
"எனக்கு பசிக்கிது யாரு கேண்டீன் வரிங்க" என்றாள்.

ஏற்கனவே மொக்கி இருந்தாலும் அவளுக்காக போகலாம் என்றே இருந்தது. அவள் இரண்டு பரோட்டாவை ஒன்றரை மணி நேரமாய் சாப்பிட்டு கொண்டே அவள் போட்ட மொக்கைகளை, அழகாய் கேட்டுக்கொண்ட என்னையும் சரண்யாவையும் கேண்டீனில் இருந்த அத்தனை பேரும் அனுதாபமாய் பார்த்தனர். :-)

"நீ என் RJ வா ஆக கூடாது வைஷு" என்றேன் (அவள் பெயரை மீண்டும் கேட்டுக்கொண்டேன் ). இடைவிடாமல் மொக்கை போடவும் தனித்திறமை வேண்டும் அல்லவா...

"நீ ஏன் வளரவே இல்ல, வைஷு ", என்றாள் சரண்யா.

"நீ என்ன எனக்கு காம்ப்ளான் கொடுத்தாயா, அல்லது ஆர்லிக்ஸ் தான் கொடுத்தாயா? நான் வரளவில்லை என கவலைப்பட" என்றாள் செம குரலில்.

"எவ்ளவோ ட்ரை பண்ணாலும் பபுள் மட்டும் வரமாட்டேன்குதுப்பா" என்றாள்.

sprite வாங்கி கொடுத்து உள்ளே தள்ள வைத்தோம்.

"என்னோட juniors க்கு எதை சொல்றேனோ இல்லையோ இந்த காலேஜ் கான்டீன்ல பரோட்டா மட்டும் வாங்காதிங்கன்னு சொல்லிவைக்கணும்" என்றாள்.

மெல்ல அவள் சாப்பிட்டு முடித்ததும், நகர்ந்தோம்.

இசை, புத்தகம், கல்லூரி வாழ்க்கை என ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தாள். இடையில் விண்ணைத்த்தாண்டி வருவாயா பாட்டு போட்டு சரண்யாவை ஓட்டிக்கொண்டே, இருந்ததில் நேரமும் ஓடியது.

அவளுக்கும் காஞ்சிபுரம் தான் என்பதால், இன்னும் ஆறுதலாய் இருந்தது.
மாலைக்குள் நட்பு ஏகமாய் வலுப்பெற்றது. அவள் ஏதோ ஒரு பெண்னை பார்த்து நக்கல் அடித்தாள், சிரித்துகொண்டே அவள் நெற்றியில் இடிக்கும் அளவுக்கு நெருங்கினோம்.
.
.
முடிவுகளை அறிவித்த போது, அவள் பெயரை படிக்கையில் அவளைவிட பன்மடங்கு சந்தோஷத்தில் இருந்தேன். கட்டியணைத்துகொண்டோம்.

அவள் அப்பாவிற்கு, அவள் வேலைக்கு செல்லவிருப்பதில் விருப்பம் இல்லை, திருமணம் செய்து வைக்க நினைக்கிறார், என்பது போல் பேசினாள். "நான் எப்படியாவது பேசி சமாளிச்சு வந்துவிடுவேன் கனி".... என்றாள் சிரித்து கொண்டே.
மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையுடன் விடைப்பெற்றோம்.


சரியான படிப்ப்ஸ், சராசரி மதிப்பெண் 89% அவளுக்கு... :-) நான் ஒரு யூனிட் டெஸ்ட்ல கூட எந்த பாடத்துளையும் இவ்ளோ மதிப்பெண் வாங்கினது கிடையாது.
பல மொக்கைகளைத் தவிர, உடன் வந்து தோல்வி அடைந்த தோழிகளை அவள் தேற்றிய விதத்தையும், பிறருக்கு உதவும் குணத்தையும் என்னவென்று சொல்ல...

அவளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது ஏராளம்.
நல்ல நட்பை பெற்ற சந்தோஷத்தில் நான்.

....................

எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அமைவதே தூய நட்பாம்.
வாழ்வில் நாம் சந்திக்கும் பலரில் சிலர் மட்டுமே என்றும் நம் நெஞ்சத்தில் ஊன்றி இருப்பர்.
அவர்களிடம் நாம் பழகியது சில மணி நேரமாய் இருந்தாலும் அவர்களின் தாக்கம், அளவிட முடியாததாய் இருக்கும்.
என்னை தாக்கிய சில தேவதைகளை பதிவிட விரும்பி செய்த, என் முதல் முயற்சி .

Wednesday, May 19, 2010

இது தான் ஆனந்த கண்ணீரோ!!!

இது தான் ஆனந்த கண்ணீரோ!!!
"இனி தம்பியோட fees க்கு கஷ்டப்பட வேண்டியதில்லை அம்மா"
என்றேன் நேற்று.
அன்னையின் கண்களில் இருந்து தாரை தாரையாய் நீர்......

தந்தை விட்டு சென்ற அத்தனை பொறுப்புகளையும்,
செம்மையாய் செய்ய ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. மிக நல்ல கம்பெனியில், தேவைக்கும் அதிகமான சம்பளத்துடன் வேலை கிடைத்துள்ளது. :-)

கடந்த இரண்டு நாட்களாய் நடந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்றது மொத்தம் 1498 பேர் இறுதியில் தேர்வு செய்யப்பட்டது 80 பேர்.

அதில் நானும் ஒருத்தி என அறிவித்த போது....... அந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை. துள்ளி குதித்து ஓடினேனாம், தோழி ஒருத்தி சொன்னாள்.

இந்த வேலை எனக்கு கிடைக்க, என்னை விட பலமுறை கடவுளிடம் வேண்டிய, வேலை கிடைத்ததும் என்னை விட பல நூறு முறை சந்தோஷப்பட என் அன்பு தோழிகளுக்கும், நண்பர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உறவினர்களுக்கும் மிக்க நன்றி.

சோர்ந்த போதெல்லாம் தட்டி கொடுத்து, வெற்றி பெற்றபின் தொலைபேசியில் ஓவென கத்தி மகிழ்ந்த என் நெஞ்சார்ந்த தோழி 'யுஜி' மற்றும் அன்பு 'ரங்கி'கும் என்றும் என் அன்புகள்.... :-)





வாழ்க்கை பயணத்தில் மறக்க முடியாத, மகிழ்ச்சியான நாட்களில் பயணித்து கொண்டு இருக்கின்றேன்... :-)

Saturday, May 15, 2010

நட்டு, ஒரு மாசம் ஆய்டுச்சி......

"மாமி, இன்னிக்கு மழை வர மாதிரி இருக்குல..."
"இன்னிக்கு வர வேண்டாம் கனே*, நேத்து தானே நட்டோம், இன்னும் பச்ச கட்டல இல்ல, மழை பெஞ்சா தாங்காதுமா"

"கடவுளே இன்னைக்கு மழை வேண்டாம் நாளைக்கு சேர்த்து வெச்சி பெய்யட்டும்......"

அது தான் நான் முதல் முறை மழை வேண்டாம் என வேண்டியதாய் இருக்கும்.

தாத்தா இறந்த நான்கு ஆண்டுகளுக்குப்பின் இப்போதுதான்
நெல்லு போட்டு இருக்கோம்.

"நட்டு, ஒரு மாசம் ஆய்டுச்சி...... " :-)




செம காத்து...













விட்டு, நாலடி நடந்து வந்ததுக்கு, ரெண்டு எலுமிச்சை, ரெண்டு மாங்காய்....



(உள்ள பாம்பு இருக்கா??
இல்ல சிலந்தி தான்... :-) )



அதோ தெரியுதே.... அதுதான் எங்க வீடு...

காத்து வாங்கிக்கொண்டே நடக்கையில், தோன்றியது 'குடுத்து வெச்சவ கனி நீ' என்று....
சிரித்து கொண்டே ரசித்தேன்...

"எங்க, போட்டாத கூட எடுக்க முடியல" என்று யாரோ பேருந்தில் புலம்பியது நினைவிற்கு வர, யோசனை எங்கோ போனது...



(கனே - கண்ணே என்பதன் மருவு )