Wednesday, September 21, 2011

folder shortcut virus - ல் இருந்து தப்பிப்பது எப்படி?

எப்போதாவது நீங்கள் இந்த சூழ்நிலையை பார்த்ததுண்டா? USB pen drive, external hard drive and sd memory card போன்றவற்றில் உங்களின் folder-கள் அனைத்தும் shortcut ஆக மாறி இருக்கும். my computer-ல்  சில GB-கள் காட்டும் ஆனால் உள் சென்று பார்த்தால் வெறும் 2KB அல்லது 4KB shortcuts இருக்கும்.

ஏன் இப்படி ஆகிறது?

நீங்கள் ஏற்கனவே நினைத்தபடி இது virus அல்லது Trojans தான். உங்கள் folder -களை மறைத்து உள்ளது. சில நேரங்கில் show the hidden folders and files option-னை கிளிக் செய்ததும் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும். ஆனால் பல நேரங்களில் இது உதவாது.

என்ன செய்யவேண்டும்?


உங்களின் removable media -வினை format செயய வேண்டாம். அது நிரந்தர தீர்வாகாது, மேலும் உங்களின் data files -களை recover செய்வதும் சிரமம் ஆகிவிடும்.

உங்களின் removable media G : drive -ல் இருப்பதாக நான் எடுத்துகொள்கிறேன். 

1. கிளிக் Start  --> Run --> பிறகு பின் வரும் கமாண்டினை copy paste செய்யவும்..

attrib -h -r -s /s /d g:\*.*  

உங்களின் removable media வேறு drive -யில் இருந்தால், அத்தனை G : ஆக மாற்றவும்(rename).

2 . இப்போதும் உங்களின் folder -கள் தெரியவில்லை என்றால் இந்த Malware tool
லினை trial செய்யவும். இந்த டூளினால் removabale media வினை ஸ்கேன் செய்து வைரஸ்களை அழித்த பின் உங்களின் data files தெரியும்.

இந்த பதிவு உங்களுக்கு உதவினால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். உங்களின் சந்தேகளுக்கு இயன்றவரை பதில் அளிக்கிறேன். :)

Monday, September 12, 2011

கரைசேர்ந்த அன்பு (பகுதி 5)

 இது என்ன காற்றில் இன்று ஈரப்பதம் குறைகிறதே..
ஏகாந்தம் பூசிக்கொண்டு அந்திவேளை அழைக்கிறதே..

Sony speakers எகிறிகிட்டு இருந்தது..

அப்பா mobile ring ஆனது..
ஏதோ ஒரு unknown number..
அப்பாவை தேடி புடிச்சு அவர்கிட்ட கொடுத்தேன்..
ஆஆங் சொல்லுங்க மாப்பிள்ளைன்னு ஆரம்பிச்சார்..
சரி.. சரிப்பா.. பார்த்து பத்ரமா போய்ட்டு வாங்க..
அம்முகிட்ட பேசறிங்களா..?

எதிர் தரப்பில் என்ன reply வந்துச்சோ தெரியல.
சிரித்து கொண்டே தொடர்பை துண்டித்தார் அப்பா..

எங்கியாச்சு இப்படி ஒரு மாப்பிளை இருப்பானா..
ராணியோட would be என்னடானா கல்யாண பேச்சு எடுக்கும் போதே இவளோட நம்பரை எப்படியோ வாங்கிக்கிட்டு ..
daily night mobile-ல ஒரே பேச்சு என்று சொல்லி இருக்கா..
இவர் ஏன் இன்னும் என்  நம்பரை வாங்காமல் இருக்கார்?

ஒரு வேலை நான் முழு மனசோடு ஒப்பு கொள்ளவில்லையென வருத்தமோ?
தெரியலையே..

அப்பா மும்முரமா அவரோட மாப்பிளை நம்பரை save பண்ணிக்கொண்டு  இருந்தார்.
என்னவாம்ப்பா?
ஹே.. மாப்பிளை sydney flight ஏற போகிறாராம்டா. ஏர்போர்ட்ல இருந்தது பேசினார்..
ஏம்ப்பா அவர் என்னிடம் பேசல?
சிரித்தார்.
Sollungappa, ஏன் நீங்க சிரிக்கரிங்க?
அது உங்க ரெண்டு பேர் பிரச்சனைமா நான் தலையிட விரும்பல.
ரொம்ப தான் கிண்டல் பண்ணி சிரிக்கரிங்கப்பா ..
உங்க mobile தாங்க..

லாஸ்ட் கால்-லை டயல் பண்ணேன்..
ஹெலோ. நான் அம்முதின் செல்வி பேசறேன்.
Flight ஏற போறதா அப்பா சொன்னார்? என் கிட்ட சொல்லிட்டு போக மாட்டிங்களா மகேஷ்?
அவன் சொன்ன பதில் கேட்டு வாய் அடைத்து போனேன்..

எங்க இருந்து தான் இப்படி பேசக் கற்றுகொண்டானோ ?

மூணாவது மனுஷங்க கிட்ட தான் மொபைல்ல பேசணும் அம்மு.. நான் உன்னிடம் எப்பவோ போய்ட்டு வரேன்னு சொன்னேன்.
நீயும் சரின்னு சொன்னியே கொஞ்ச நேரத்துக்கு முன்ன?
ஹேய் என்ன confuse பண்றிங்க  ..
அதெல்லாம் அப்படி தான்.. you and me are not an individual அதான் உன்னிடம் சொல்ல தோணல..
அய்யய்யோ என்னவோ ஆய்டுச்சு இந்த பையனுக்கு என்று மனதில் நினைத்துக் கொண்டு. கால்-லை  துண்டித்தேன்.

அவன் சொன்ன பதில் என்னை கொஞ்சம் யோசிக்க வைத்தது ..

அப்பா.. மகேஷ் எப்போ திரும்பி வரேன்னு சொன்னார்?
இன்னும் 5 இல்லனா 6 நாள் ஆகும்மா..

இன்று திங்கள்.. வரும் வெள்ளியில் நடைபெற இருக்கும் குல தெய்வ வழிபாடு நினைவுக்கு வந்தது..

எங்க ஊர் பக்கம் ஒரு வழக்கம், இந்த மாதிரி திருமணமும் அதை தொடர்ந்து வரும் புது வாழ்வும் நல்லா இருக்க வேண்டும் என  நடைபெறும் குல தெய்வ வழிபாட்டில் மணப்பெண்ணும், மணமகனும்  கலந்து கொள்ள கூடாது.
ஏன் என்று இது நாள் வரை அர்த்தம் தெரியாது. ஆனால் அப்படித்தான் நடக்கும்.

ஆன்ட்டியும் அங்கிள்-லும் வீட்டில் full time இருக்க துவங்கி இருந்தார்கள். என்னை மட்டும் தவிர்த்து மூவரும் சேர்ந்து எப்போதும் ஒரே  கிண்டலும் சிரிப்பும் தான்.
தனிமையை உணர்ந்தேன்.
FB போய், மகேஷிடம் பேச வேண்டும் போல இருந்தது.
அவன் அங்கு இல்லை.
Waiting for u.. என message அனுப்பி log off பண்ணினேன்.

அப்படியே scooty எடுத்து கொண்டு மகேஷ் வீடு வரை சென்று வரலாம் போல் இருந்தது.
இனி நான் வாழ போகும் இல்லம் எப்படி இருக்கும் என பார்க்க அத்தனை ஆவல் எனக்கு.
இங்கு இருப்பது போல் நிறைய செடி கொடிகள் இருந்தால் அந்த வீடு என் மனதொடு  ஒட்டிக் கொள்ளும்.
இல்லையெனில்.. ஏன்  negativa யோசிக்கணும். போய் பார்த்து விட்டால் தேவலாம் போல் இருந்தது.

ஆன்ட்டி..
சொல்லுமா ..
நான்..
சொல்லுடா..
நான், விக்கியோடு மகேஷ் வீடு வரைக்கும் போயிட்டு வரட்டுமா?
(விக்கி, எட்டாவது படிக்கும் பக்கத்துக்கு வீட்டு பையன் என்பதும், என் friend என்பதும் இங்கு சொல்லியே ஆகவேடும்)
மகேஷ் வீட்டுக்கா.. no no.. கல்யாணம் ஆன பிறகு தான் அங்க போகணும். இப்ப போக வேண்டாம் மா
பார்ப்பவர்கள் தப்பா பேசுவாங்க..
இல்ல ஆன்ட்டி, அங்க இருக்க போறவள் நான் தான். நான் போய் வீடு புடிச்சு இருக்கா? அங்க இருக்றவங்க  எப்படி பழகறாங்க-ன்னு  பார்த்துட்டு வந்துடறேனே..
வேணாம்டா செல்லம். நான் உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவேன்.

அதற்கு மேல் ஆன்ட்டியிடம் வாதம் வேண்டாம் என தோன்றியது.

சரி.. விக்கி வீட்டுக்காவது  போயிட்டு வரேனே..

ஓகே மா.. போயிட்டு சீக்ரம் வந்துரு..

ஓடினேன்..
ஹேய் விக்கி..
சொல்லுங்க கல்யாண பொண்ணு..
போட நீவேற..
என்ன ஆச்சுக்கா ..
மாடிக்கு வரியாடா சொல்றேன்..
அம்மா.. நானும் அம்மு-அக்காவும் மாடிக்கு போயிட்டு வந்துடரோம்மா..
சரிடா.. நாளைக்கு அவ கல்யாணும் பண்ணிக்கிட்டு போயிட்டா நீ எங்க போய் படிக்க போறன்னு  தெரியல .. என சிரிச்சிகிட்டே சொன்னாங்க அகிலா அக்கா

வழக்கமாய் நாங்கள் உட்காரும் மதில் மேல் உட்காந்து பேசினோம்.
டேய் ... எனக்கு மகேஷ் வீட்ட பாக்கணும் போல இருக்குடா.. இப்பவே..
யாருக்கா மகேஷ்..?
சரியா போச்சு போ..
அதான்டா என்ன பொண்ணு பார்த்துட்டு போனானே "ஒரு தடியன்''!!
அக்கா அவரை தடியன்-ன்னு சொல்றதெல்லாம் நல்லா இல்ல.. :)
செல்லமா சொன்னா ஒரு தப்பும் இல்ல.. என வெட்க சிரிப்புடன் சொன்னேன்.
இன்னைக்கு எனக்கு இருக்கும் எல்லா problem -கும் அவன் ஒருத்தன் தான்டா காரணம்..
சரி நான் மேட்டர்-க்கு  வரேன்.. எப்படியாச்சு யாருக்கும் தெரியாம அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்துரனும்டா..

என்னால அவங்க வீட்ட பார்க்காமலாம் கல்யாணம் பண்ணிக்கிட்டு போக முடியாது.
உன்னால் கூட்டிகிட்டு போக முடியுமா முடியாதான்னு சொல்லுடா..
இரு.. யோசிக்ரோம்ல..
சரி.. சரி.. யோசி..
உங்க வீட்ல எங்கையாச்சும் மொத்தமா வெளிய போவாங்களா?
ஆமா வர வெள்ளிக்கிழமை. கோவிலுக்குடா..
நீ அவங்க கூட போகாத அம்மு.. ஏதாச்சு சாக்கு சொல்லி நின்னுடு..
ஹே நான் வரேனாலும் கூட்டிட்டு போக மாட்டாங்கடா..
ஏன்?
நான் போக கூடாதாம். அது அப்படி தாண்டா..
சரி பிளான் ஓகே தானா உனக்கு?
டபுள் ஓகேடா .

Friday எப்படா வரும் என்று பார்த்துட்டு இருந்தேன்.

காலையே எல்லாரும் கோவிலுக்கு புறப்பட்டுட்டாங்க..

எனக்கு துணையா ஒரு பாட்டியை வீட்ல விட்டுட்டு போய் இருகாங்க..

'பாட்டி.. நான் பக்கத்துக்கு ஊர்ல இருக்கற friend-க்கு பத்திரிக்கை கொடுத்துட்டு  வந்துடறேன்'

தனியாவாம போக போற.. நானும் கூட வரேன்.

இல்ல பாட்டி, பக்கத்துக்கு வீட்டு விக்கியையும் கூட்டிட்டு தான் போக போறேன்.

ஆனா சீக்ரம் வந்துடனும்.
சிரித்துகொண்டே சரி பாட்டி என்றேன்.

கிளிபச்சை நிற தாவணி, சில்வர் ஜரிகை.. ரொம்ப புடிச்ச டிரஸ் போட்டுகொண்டு புறப்பட்டேன்.

விக்கியும் வந்துட்டான்.

ரெண்டு பேரும் விக்கியோட ஸ்கூட்டியில் கிளம்பினோம்.

நேற்றே விக்கி, மகேஷின் வீட்டை கண்டு கொண்டதால், 10 நிமிஷத்துல அந்த தெருவுக்கு போய்டோம்.

ஏனோ இடம் நெருங்க நெருங்க.. மனசு திக் திக்-ன்னு இருந்தது..

எப்படியும் அந்த வீட்டில் எல்லாரும் கோவிலுக்கு போய் இருப்பாங்க. யாராவது  ஒருத்தர் மட்டும் வீட்டில் இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்.

வீடு பூட்டி இருந்தால் வெளிய மட்டும் பார்த்துட்டு வந்துவிட வேண்டியது தான் என  மனதில் நினைத்துக்கொண்டேன்.

சரி அப்படி யாராச்சு இருந்து, அவங்களுக்கு நம்மள அடையாளம் தெரியாம போய், வீட்டு உள்ள சேர்க்கவில்லை என்றால்?..

பயத்துல வேர்த்துடுச்சு..

அக்கா..
.
அக்கா...

ம்ம்.. சொல்டா..

அதோ ஒரு வீட்டு முன்னாடி செடியெல்லாம் இருக்கே அது தான் உன் வீடு  ஆகபோகுது..

'கொள்ளை அழகு அந்த வீடு..'

விக்கி வீட்டு முன்னாடி வண்டியை நிறுத்தினான்.

வீடு திறந்து தான் இருந்தது.

அக்கா.. நீ போய் பார்த்துட்டு வா.. நான் wait பண்றேன்..

வெளியவேவாடா?

இல்லக்கா என்னோட friend வீடு இருக்கு இதே தெருதான்..

அவன் கூட கொஞ்சம் வேலை இருக்கு.. நீ சுற்றி பார்த்ததும் எனக்கு கால் பண்ணு நான் வரேன் என்றான்.

சரி என தலையாட்டினேன்..

தெருவில் கிட்டத்தட்ட யாருமே இல்லை.

எல்லோரும் கோவிலுக்கு தான் போய் இருக்க கூடும்.

விக்கி சென்றதும் வீட்டை நிமிர்ந்து பார்த்தேன்..

அழகோ, அழகு.. Compound கேட்டின்  மேல் ஒரு வளைவு, அதில் அதன் அழகா பூ கொடி.

ஒவ்வொரு பூவும் ஒரு நிறம், சின்ன ஸ்பீக்கர் வடிவில் இருந்தது. அத்தனையும் அன்று என் வரவிற்காக பூத்த  பூக்கள்.

ஓட்டு வீடு..

மெதுவாய் கேட் திறத்து உள்ளே போனேன்.

நாய் குறைத்து.. லைட்டா  மறஞ்சு' இருந்த பயம், மீண்டும் தலை எடுத்தது.

சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தது. தப்பினேன்..

நாயின் குரல் கேட்டு ஒருவர் மண்வெட்டியோடு ஓடி வந்தார்..

என்னை பார்த்ததும் அத்தனை பூரிப்பு அந்த முகத்தில்.

அம்மா.. போட்டோவை விட நேர்ல ரொம்ப அழகா இருக்கீங்க..

வியர்த்து இருந்த என் மீது ஒரு தென்றல்.

சிநேகமாய் புன்னகைத்தேன்.

என்னங்கம்மா இந்த பக்கம்?! தாத்தா உள்ள தான் இருக்காரு.. உள்ள வாங்கமா.. என்றார்.

புகபோகும் வீடு..  என் கனவுகளின் இல்லம்..

கால் எடுத்து வைத்தேன். ஞாபகமாய் வலது கால். நம்பிக்கை இல்லை இருந்தாலும், ஞாபகமாய் வலது காலினை எடுத்து வைத்தேன்.

தாத்தா ஏதோ புத்தகம் வாசித்து கொண்டிருந்தார்.

என்னை பார்த்ததும், அத்தனை ஆச்சர்யம் அவர் முகத்தில்..

எங்க என் பேத்தியை கல்யாணத்துல தான் முதன்முதலா பார்க்க போறேனோன்னு நினைத்தேன்மா.. மகாலட்சுமி மாதிரி நீயே என்ன தேடி வந்துட்ட..

டேய் பேதிக்கு இளநிர் கொண்டுவா என்றார்.

அதுவரை தாத்தாவை மட்டுமே பார்த்து கொண்டிருந்தன கண்கள்.

என்னம்மா இந்த பக்கம். வேலை ஏதாச்சு இருந்துச்சா?..

ஆமா தாத்தா இந்த ஊர்ல எனக்கு ஒரு friend இருக்கா, அவளுக்கு பத்திரிக்கை கொடுக்க வந்தேன்.

நம்ம வீட்டை பார்க்கனும்னு ரொம்ப நாளா ஆசை தாத்தா.. அதான் வந்தேன். அப்பாக்கும் அங்கிளுக்கும் தெரியாது தாத்தா. நான் யார்கிட்டயும் சொல்லல.
சொன்ன வேணாம்னு சொல்லுவங்கனு தான் தாத்தா.

அதுக்கென்னம்மா நீ வந்து போனதை யாரிடமும் நான் சொல்ல மாட்டேன்..

தாத்தா..

சொல்லுமா..

நான் இந்த வீட்டை சுத்தி பார்க்கட்டுமா?

தாராலமா... இது உன் வீடுமா.

அப்போது தான் நிமிர்ந்தன என் கண்கள்.

கூடம் முழுக்க சாமி படங்கள். அவ்ளோ சுத்தமாய் இருந்தது ஹால்.

சமையல் அறை கொள்ளை அழகு.

எல்லாம் கண்ணம்மா கை வண்ணம்மா.. எல்லாத்தையும் சுத்தமா செய்வாங்க. என்றார் தாத்தா.

அந்த தூரத்து உறவுகாரம்மாவை பற்றி சொல்லி கொண்டிருந்தார் தாத்தா.

உண்மையில் அவங்க ரொம்ப நல்லா வேலை செய்பவர்கள் தான், ஏனெனில் காசு கொடுத்தால் கூட இவ்ளோ பெரிய வீட்டை அழகா  சுத்தமா வெச்சி இருப்பது கஷ்டம்.

She is great என நினைத்துக் கொண்டேன்.

ஒரு ரூமில் no entry என்று ஒரு sticker இருந்தது.

பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது எனக்கு.

அது தான் மகேஷோட ரூம் மா. அந்த பையன் இப்படி தான் ஏதாச்சு செவத்துல', கதவுல ஒட்டிக்கிட்டே இருப்பான். நீ உள்ள போய்  பாருமா.
 என்றார் தாத்தா easy chair-யில் அமர்ந்தபடி.

உள்ளே நுழைந்தேன். ஒரு bed, Shelves, computer, lot of books, dvds, speakers, shields, photos, ஏகப்பட்டது இருந்தது.

எல்லாம்  சேர்ந்து ஒரு புன்னகையை வர வைத்தது. கண்காட்சியில் அடுக்கி வைக்க பட்டு இருந்தவைகளை போல் பர்வையிட்டேன்

கனவு போல் இருந்தது...

இந்த ரூம்குள்ள இன்னொரு ரூம். அந்த கதவின் மேல் ஒரு மயில் இறகு ஒட்டப்பட்டு இருந்தது.

கதவை திறந்தேன், துணி மாற்றும் அறை போலும், ஷெல்ப்ல துணிகள் இருந்தது. அந்த ரூமோட இன்னொரு பக்கம், சுவரையே மறைக்கும் அளவுக்கு பெரிய கண்ணாடி.

கண்ணாடியை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர்.

அந்த கண்ணாடியில் என்னுடைய photo enlarge செய்யப்பட்டு மேலே சொருகப்பட்டு இருந்தது. போட்டோவின் ஓரத்தில், "எப்போ டி புடிச்சு இருக்குன்னு சொல்லுவ?" என்று மகேஷ் எழுதிவைத்து இருந்தான்.

அழுது கொண்டே அந்த போட்டோவை பார்த்துக் கொண்டு இருந்தேன். மகேஷ்க்கு என்னை இவ்ளோ பிடிக்கும் என இதுவரை தெரியாது. ஏன் இப்போது அழுகிறேன் என்றும் தெரியாது.

ரொம்ப நேரம் ஆகி இருக்கும்.

யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. மெதுவாய் கண்களை துடைத்துக் கொண்டு, முகத்தை சரி செய்து, கதவை திறந்தேன்.

நின்று கொண்டிருந்தது மகேஷ்.

மீண்டும் என்னை அறியாமல் கண்களில் நீர்.

ஹே!! ஏன் அழற அம்மு..

கண்களை துடைத்தவாரே .. Nothing என்றேன்..

என்ன ஆச்சுப்பா  .. சரி வா.. bed -ல உட்காரு..

இருவரும் அமர்ந்தோம்..

எவ்ளோ சந்தோஷமா இருக்கேன் தெரியுமா.. நீ என்னடான அழுதுகிட்டு.

நானும் சந்தோஷத்துல தான் அழுதுட்டேன் என்றேன்.

சிரித்துவிட்டான்.

இருவரும் சிரித்தோம்.

டைம் ஆச்சு நான் வீடுக்கு போகணும், அப்பாக்கு தெரியாம வந்துட்டேன். அவங்க கோவில்ல இருந்து வரதுக்குள்ள போகணும்.

ஹே.. என்ன.. நீ பாட்டுக்கு பேசிகிட்டே போற.. இப்பவெல்லாம் உன்னை போக விடமாட்டேன்.

ம்ஹும்.. நான் ஓடிடுவேன்..

சொல்றத கேக்கல.. உங்க அப்பாவிடம் சொல்லிடுவேன்.. "அங்கிள் உங்க பொண்ணு எங்க வீட்ல தான் இருக்கான்னு" ..

ப்ளீஸ் சொல்லாதிங்க.. நான் போகணும்..

ம்ஹும்.. நீ சரிபட்டு வர மாட்ட.. நான் அங்கிளுக்கு கால் பண்றேன் இரு..

நிஜமாவே கால் பண்ணிட்டான்..

அங்கிள் உங்க பொண்ணு.. அப்படி என ஆரம்பிச்சவன், வேற modulation-ல.. அங்கிள்.. நல்லா இருக்கீங்களா என்றான்..

பயந்தே போய்டேன்.. படுபாவி.. என மனதில் நினைத்து கொண்டேன்.

நான் நல்லா இருக்கேன் அங்கிள். இன்னைக்கு morning தான் சென்னைக்கு வந்தேன். அங்க இருந்து கோவை வரை flight அப்புறம் call taxi.
Project success அங்கிள். கோவில்ல  அபிஷேகம் எல்லாம் முடிஞ்சிடுச்சா?

ஓ! அப்படியா சரிங்க அங்கிள். நான் வீட்டுக்கு வந்துட்டதா அப்பாவிடமும்,  கண்ணம்மா அம்மாவிடமும்  சொல்லிடுங்க..
ஓகே அங்கிள். வெச்சிடறேன்..

உயிர் திரும்ப வந்தது..

என்னை பார்த்து கள்ள தனமா சிரித்தான், வசமா மாட்டிகிட்டேன். ஹையோ.. எப்படியாவது இந்த ரூம்ல இருந்து தாத்தாவிடம் ஓடிவிட வேண்டும் போல இருந்தது..

Half saree super அம்மு.

ஓடி வந்துவிட்டது வெட்கம். அதையும் மீறி சரி என்றேன்.

Saree தான.. இரு என்றான்.

என்ன லூசு தனமா சொல்றான், ஹெலோ நான் சரின்னு  தான் சொன்னேன். என்றேன். நான் சொல்வதை கேளாமல் suitcase-ஐ திறந்து
ஒரு  அழகான, red colour சாரீயை வெளியில் எடுத்தான்.

ரெட் கலர் சாரீ, ரெடிஷ் embroidery. குட்டி குட்டி வெள்ளை முத்து வெச்சி  அவ்ளோ அழகா இருந்தது சாரீ.

உனக்கு தான். சிட்னி போறதுக்கு முன்னாடியே வாங்கினேன். எப்படி உன்னிடம் தருவது என தெரியாமல் இருந்தேன். நீயே வந்துட்ட. நீ வராமல் இருந்து இருந்தா இன்னைக்கு evening உங்க வீட்டுக்கு வந்து இருப்பேன் தெரியுமா, என்றான்.

இவ்வளவு அன்பாய் இருப்பவனிடம் தான் சொல்லாமல் மறைப்பது சரியா?  என நினைத்தாள் அம்மு..

Wednesday, June 1, 2011

Arranged Love - Part 4

( முதல் முறைய இந்த தொடர்கதையை வாசிக்க வந்து இருக்கீங்களா? அப்போ இதை படிச்சிட்டு இங்க வாங்க..
part 1
part 2
part 3 )



கொஞ்சம் பயந்துபோனேன். வெறித்து ஸ்க்ரீனையே பார்த்துக்கொண்டிருக்க மறுபடியும் 'ஹாய் அமுதா' என்றான்.
ஹாய் சொல்லி பொதுவாய் பேசிக்கொண்டிருந்தோம்.

மகேஷ் : நெக்ஸ்ட் சண்டே உன்னை பெண் பார்க்க வரேன் ஞாபகம் இருக்கா?
அமுதின்செல்வி: அதுகூட ஞாபகம் இருக்காதா?
M: :) பிடிச்சு இருக்கா?!!!
A: தெரியவில்லை!
M: :) எனக்கும் அதே மன நிலை தான்.
பாக்கலாம் life ரெண்டு பேரையும் எப்படி கொண்டுபோகுது என்று
A: ம்ம்..
M: நெக்ஸ்ட் monday sydney போகபோறேன்.
A: ஓ! குட்! ஆபீஸ் வேலையா?
M: ஆமா.. ஒரு புது ப்ராஜெக்ட் விஷயமா.. 4 டேஸ்ல திரும்ப வந்துவிடுவேன்..
A: ம்ம்... சரி.. கொஞ்சம் வேலை இருக்கு. நான் போகட்டுமா?
M: ஓகே அம்மு.. நீ உன் வேலையை பாரு.. மறுபடி எப்ப வருவ?
.
.
எனக்கு என்ன டைம் சொல்வதென்று தெரியவில்லை. log out பண்ணிட்டேன்.
பின் அதற்காக வருத்தப்பட்டேன்.
நான் வரும் நேரத்தில் அவன் இல்லை. நான்கு முறை message அனுப்ப முயற்சித்து பின் கைவிட்டுவிட்டேன்.
ஏனோ ஒரு குழப்பம், ஒரு தயக்கம்.
நாட்கள் கழிந்து ஞாயிறு வந்தது..
ஒவ்வொரு சொந்தமாய் வீடு வந்து சேர்ந்தார்கள்.
எதிர்பார்த்திராத அளவிற்கு கூட்டம். அப்பாவிடம் மெதுவாய், ஏம்ப்பா பெண் பார்ப்பதற்கே இவ்ளோ பேர் வர சொல்லிடிங்க... என கடிந்து கொண்டேன்.
வெட்கமும் டென்ஷனும் கலந்த காலை.
மாப்பிளை வீட்டார் வந்து சேர்ந்தனர்.
என்னை சுற்றி ஏதேதோ யார்யாரோ பேசிக்கொண்டிருக்க.. ஒன்றும் காதில் விழவில்லை எனக்கு.
அம்மாவின் இழப்பை உணர்த்த மற்றொரு நாள் அன்று. அம்மாவை பற்றி நினைத்துக் கொண்டிருக்கையில்
ஆன்ட்டி என் அருகில் வந்து அமர்ந்துகொண்டு.. என் கைகளை இறுக பற்றிக்கொண்டார்.
டெலிபதியாய் இருக்குமா என தெரியவில்லை.
அம்முகுட்டி.. என்றார்.
ஆன்ட்டி என்றேன்..
ஹே என்ன ஆச்சு!! ஏன்டா குரல் ஒரு மாதிரி இருக்கு..
தெரியல ஆன்ட்டி என்றேன்.
ஒண்ணுமில்லடா பயப்படாதே.. இன்னும் கொஞ்ச நேரத்துல உன்னை கூப்பிடுவாங்க ..
நான் வந்து கூட்டிட்டு போறேன் சரியா.. வேற ஒன்னும் இல்லடா.
உலகம் பார்க்க அவசரமாய் வெளிவந்தது கண்ணீர்..
அச்சச்சோ.. makeup எல்லாம் கலையுது பாரு..
கண்கலங்காதடா அம்மு நீ பயப்பட இங்க ஒண்ணுமே இல்ல.. என்று சொல்லி என் நெற்றியில் முத்தமிட்டாள் என் இரண்டாம் தாய்.
இக்கண்நீருக்கான விடை தேடிக்கொண்டிருந்த வேளையில்,
ஆன்ட்டி வந்து அழைத்து சென்றார்கள் ஹாலுக்கு.
அங்கிருந்த ஒருவரையும் நான் பார்க்கவில்லை.. பயத்திலும் வெட்கத்திலும் என் முகம் படு பயங்கரமாய் சிவந்துவிட்டது..
மாப்பிளையை பார்த்துக்கோம்மா என யாரோ சொல்லி கிண்டல் அடித்தார்.. சபை சிரித்தது..
ஆணி வைத்து அடித்தார் போல் என் கண்கள் தரையை விட்டு விலகவில்லை.
அங்கேயே உட்கார செய்தார்கள். ஏதேதோ இருவீட்டாரும் பேசிக்கொண்டிருக்க.. அங்கு கேட்ட முக்கியமானவைகளில் சில..
மகேஷின் அம்மாவும் சிறு வயதிலேயே இறந்து போன விஷயம்.
மகேஷ்க்கு சென்னைல தான் வேலை. அங்கேயே ஒரு பிளாட்டில் வசிக்கிறான். monday சிட்னி போகிற விஷயத்தையும் சபையில் சொன்னார் அவனின் அப்பா. இந்த புது ப்ராஜெக்ட் அவனோட கம்பனிக்கு கிடைத்துவிட்டது என்றால், அவனும் நானும் சிட்னியில் குறைந்தது ஒரு வருடமாவது தங்க நேரிடும் என்பதையும் கூடுதலாக சொன்னார். (எனக்கு உள்ளுக்குள் பூகம்பம், அப்பாவையும் இந்த வீட்டையும் விட்டு பிரிவதே கஷ்டம் இதுல அவ்ளோ தூரத்துல வேற போய் இருக்கனுமா.. வேண்டவே வேண்டாம்...)
மகேஷின் வீட்டில் அவன், அவங்க அப்பா, வேலைக்கார பாட்டி.. தோட்டக்காரன், மற்றும் ஒரு வயதான தூரத்து
உறவுக்கார தாத்தா இருப்பது தெரியவந்தது..
அவர்கள் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கு பின்னும் ஒரு கதை இருப்பதாக சொன்னார் அவரின் அப்பா..
சிறிது நேரம் கழித்து என்னை தனியே அழைத்துசென்ற ஆன்ட்டி..
அம்மு உனக்கு இந்த மாப்பிளையை புடிச்சு இருக்கா என்றார்..
உங்களுக்கு புடிச்சு இருக்கா ஆன்ட்டி?
புடிச்சு இருக்குமா.. ரொம்ப நல்ல பையன், எனக்கு சின்ன வயசுல இருந்தே அவங்க family பத்தி தெரியும்டா, அந்த ஊர்ல ஒரு 5 வருஷம் இருந்தது இருக்கோம்ல..
அப்பாக்கு?
எல்லாருக்கும் ஓக்கேடா.. நீ சொல்லு.. உன் விருப்பம் தான் முக்கியம்..
ம்ம்.. என்றேன் குனிந்துகொண்டே..
ஹே!! பொண்ணுக்கு இந்த கல்யாணத்துக்கு ஓக்கேவாம்..
இன்றைக்கே தேதி fix பண்ணிடலாம் என்றார் அங்கிள்...
அடுத்த மாதம் 15 ஆம் தேதி திருமணம் என்றும், வர வெள்ளிக்கிழமை குலதெய்வ வழிபாடு என்றும் முடிவு செய்யப்பட்டது..
பெண்பார்க்கும் படலத்தை நிச்சையதார்த்தமாகவே மாற்றிவிட்டார்கள்.
சந்தோஷம் + வெட்கம் + பயம் = கல்யாணம்.
என புது formula கண்டு பிடித்தேன் அன்று..
எல்லாரும் சாப்பிட்டு, அப்பாவிடமும், அங்கிளிடமும் பேசிவிட்டு வெளியேறினார்கள்.
மகேஷ் காரில் ஏறும் நேரத்தில் அங்கிள் ஏதோ அவன் காதில் சொன்னார்.. ஆன்ட்டி அதற்குள் என்னிடம், மகேஷ் ஏதோ உன்கிட்ட பேசனுமாம் கீழ பாரு என்றார். நான் மாடியில் நின்று கொண்டிருந்தேன் அப்போது.
மகேஷிடம் அங்கிள் நான் ஏதோ சொல்ல விரும்புவதாக சொல்லி இருக்கவேண்டும்..
நான் மகேஷை பார்க்க.. அவன் என்னை பார்க்க.. eyes to eyes first time!!
ஊரே சிரிக்குது அங்கிள் ஆன்ட்டி பண்ண வேலைல.. அப்புறம் சமாளிச்சு மகேஷும் அவன் family-யும் புறப்பட்டாங்க..
அன்று இரவு மகேஷ் fb வந்தான் அதிசயமாய்..

M: ஹே! உன்னிடம் பேச தான் fb வந்தேன்.. பார்த்தா நீயே இருக்கியே.. Gud god!
A: :) நாளைக்கு எத்தனை மணிக்கு flight ?
M: இவினிங் ஆறு மணிக்கு..
A: ம்ம்.. ஓக்கே..
அப்புறம்..
M: என்ன வேலை இருக்கா?
A: ஆமா கொஞ்சம் வெளிய போகணும்..
M: முக்கியமான வேலையா?
A: ம்ம்.. கோவிலுக்கு ஆன்ட்டி கூட..
M: ஓ! சரி..
A: logout பண்ண போறேன்..
M: ஹே! ஒரு நிமிஷம்..
கல்யாணத்துக்கு ஓக்கே சொல்லிட்ட..
A: ஆமா
M: என்ன புடிச்சி இருக்கானு கேட்டதுக்கு தெரியலைன்னு சொன்ன..
A: இப்பவும் சொல்றேன்.. எனக்கு தெரியல..
M: :).. சரி போ.. i ll wait..



(ரொம்ப நாள் கழித்து இந்த பதிவை போடுவதற்கு மன்னிக்கணும்.. :) வேலை பளு!
)

Sunday, April 24, 2011

Arranged Love - Part 3


கொஞ்ச நாளுக்கு இந்த கல்யாண பேச்சு போய்கொண்டிருக்க, அப்பாவும் அங்கிளும் அவங்க வீட்டுக்கு போய் பேசிட்டு வந்தாங்க.. அப்பாவுக்கும் இதில் விருப்பம் இருக்கவே என்னோட போட்டோவை அவங்க வீட்டில் தந்துவிட்டு. மகேஷின் போட்டோவை வாங்கிட்டு வந்தாங்க. வர ஞாயிறு பெண் பார்க்கும் படலம் என்றும் முடிவாயிற்று. அங்கிள் போட்டோ வை என் கையில் தந்துவிட்டு "பார்த்து சொல்லு அம்மு... உனக்கு பிடித்தால் தான் நிச்சயம்..." என்றார்.

கவரினை பிரித்து பார்கையில் மகேஷ் சிரித்துக் கொண்டிருந்தான்.

சும்மா ஒரு பையன நண்பனா ஏத்துக்கவே அவ்ளோ யோசிப்பவள் நான்.. எப்படி ஒரு போட்டோவை பார்த்து கல்யாணத்துக்கு ஓகே சொல்வேன் என்று எதிற்பர்க்கறாங்க.. போட்டோவை ஒரு ஓரமாய் வைத்துவிட்டு, தோட்டத்தில் ஒரு வாக்கிங் போனேன்..

''இது தான் வாழ்க்கையோட திருப்பு முனை.. பையனும், அவனோட குடும்பமும் வெளியில் நல்லவங்களா இருந்துட்டு மனசு அளவுல நல்லவங்களா இல்லாம போயிட்டா!! அய்யோ நெனச்சு பார்க்கவே பயமா இருக்கு!!.. ஏன், அவங்க ரொம்ப நல்லவங்களா இருக்கா கூடாது?'' - இப்படி என் மனதில் பல்வேறு ஓட்டங்கள்..

எல்லா கல்யாண பெண்களுக்கும் இந்த பயம் இருக்கனும்ல.. என மனம் சிரித்துகொண்டு இருக்க facebook.com என கைகள் டைப் அடித்தது.. 3 friend request 1 Message 14 Notifications என்று வரவேற்றது அது. இவற்றில் எதையும் கவனிக்காமல் மகேஷ் என டைப் அடிக்க 15 மகேஷ்-கள் வந்து நின்றனர். இதில் அவனுடைய ஊர் மற்றும் வேலை வைத்து ஒரு மகேஷை கிளிக் செய்ய அங்கும் சிரித்துக் கொண்டிருந்தான் அவன்.

இந்த போட்டோவில் மகேஷ் நல்லாவே இருந்தான். படிப்பு, வேலை, புடிச்சது, விரும்பி பார்ப்பது, கேட்பது என அங்கிள் சொல்லாத அனைத்தையும் FB சொன்னது. இனி பெண்வீட்டாரும், மாப்பிள்ளைவீட்டாரும், புகைப்படம் தருவதற்கு பதில் FB profile names தந்து கொண்டால் நலம். ஒரு சில விடயங்கள் வெளியாட்கள் பார்க்க தடை செய்து இருப்பான் போல... Add as friend கிளிக் செய்து. மற்ற வேலைகளை பார்க்க தொடங்கினேன். accepted மெயில் வந்த அடுத்த நொடியில் Hi.... என்றான் மகேஷ்!!

Monday, March 28, 2011

Arranged Love - 2



ஒரு விஷயத்தை ரசித்து பார்க்கும் போது, எண்ண அலைகள் நம்மை அறியாமல் நமக்கு பிரியமானவங்களை லிங்க் பண்ணும். இது எனக்கு அடிக்கடி நடக்கும் ஒன்று. ஒரு சின்ன பட்டாம்பூச்சி போதும், அவனை ஞாபகபடுத்துவதற்கு Black pulsar, கடையில் தொங்கவிட பட்டு இருக்கும் நல்ல T-Shirts, மாலை நேரத்து குருவி, மீன், மழை, அழகான போடோஸ், இப்படி நான் ரசிக்கும் சின்ன சின்ன விஷயம் எல்லாமே என்னுள் எழுப்பும் ஒரு கேள்வி என்னவன் என்பவன் யார்?

காதல் ஒரு அற்புதம். காதலிபவர்கள் தான் அந்த அற்புதத்தை உணரமுடியும் என்பது தவறு..
இதோ.. எங்கோ சுற்றிக் கொண்டிருக்கும் ஒருவனை பற்றி அடிக்கடி நினைவூற்றி, உயிரை வாங்கிக்கொண்டும், உயிரை கொடுத்துக்கொண்டும் இருக்கிறது காதல்..
காதல் முற்றி கவிதை வழியாய் நிரப்பிவைக்கபட்ட பொழுதுகளும் உண்டு..
இப்படி காதலோடு பயணித்து இருந்த ஒரு பொழுதினில்...

வார இறுதியில் வீட்டுக்கு வந்திருந்த போது, அப்பாவை பார்க்க வந்த மாது அங்கிள், நம்ம நல்லதம்பி வாத்தியார் மகன் நல்ல கம்பெனில வேலை செய்யறான், நல்ல குடும்பம், நம்ம அமுதாவுக்கு அந்த பையன கட்டி வெக்கணும்னு எனக்கு ஒரு ஆசைன்னு ஒரு பிட்ட போட்டாரு.

அப்பாவும் அங்கிளும் சின்ன வயசுல இருந்தே நண்பர்கள். ஒரே ஸ்கூல், ஒரே காலேஜ், ஒன்னாவே படிச்சு, வாத்தியாரா ஆனாங்க.. மாது அங்கிளுக்கு அப்பாவை ரொம்ப பிடிக்கும், அப்பாவுக்கும் தான். அண்ணன் தம்பியோ என்று கூட பல பேர் கேட்டு இருக்காக. மாது அங்கிளுக்கு பிள்ளைங்க கிடையாது. ஒரு குழந்தையை தத்து எடுத்து, படிக்க வெச்சு கல்யாணமும் பண்ணிட்டார். அடிக்கடி என்னையும் அவரோட பிள்ளைன்னு சொல்லுவாரு.

அம்மா இறந்து போனதுல இருந்து என் மீது அங்கிளுக்கும் மாது ஆன்டிக்கும் தனி பாசம். தினமும் அப்பா கூட அந்த திண்ணையில் உட்கார்ந்து நாட்டு நடப்பு, ஊர் விஷயம், வீட்டு விஷயம் பற்றி பேசலன்னா தூக்கம் வராது..

நல்லதம்பி வாத்தி பையான.. நீ எப்போடா அவனை பார்த்த, என் கிட்ட சொல்லவே இல்லன்னு அப்பா கேட்டாரு.
அவனா.. என்னடா மாப்பிள்ளைய போய் அவன் இவன்-ன்னு சொல்லிக்கிட்டு இருக்க? மாப்பிள்ளைன்னு சொல்லுடா..
ஹே!! நீ முடிவே பண்ணிட்டியா? ஷாக் ஆகிட்டார் அப்பா.. நானும் தான்...

Wednesday, March 23, 2011

Arranged Love - 1


வீட்டுக்கு முன்னாடி இருக்கும் படியில் உட்கார்ந்து மழையை ரசிக்கும் சுகம் (சுகமா, தவமா வரமான்னு தெரியாது.. அந்த feel வேற எங்கும் எதிலும் எனக்கு கிடைத்தது இல்லை.
என்னையும் மறந்து அந்த வெள்ளைச் செம்பருத்தி செடி மழையில் ஆனந்தமாய் நனைவதை பார்த்துக் கொண்டிருப்பேன்.
பச்சை ஏறிய தோட்டம். அம்மாவின் மிச்சமென அப்பா அடிக்கடி சொல்லுவார்.
சின்ன ஊட்டி வீட்ல இருக்கும் போது ரசிக்க வேற என்ன வேணும்.

அப்பா, மழை (ஈரம்), books , all time net, music எல்லாம் இருப்பதாலோ என்னவோ என் வீடு எனக்கு சொர்க்கம்.
நான் வேடிக்கை பார்க்க உட்காரும் போதெல்லாம், எனக்கு பக்கத்துலையே எங்க வீட்டு நாயும் உட்கார்ந்து கொள்ளும்.
அது என்ன ரசிக்குமோ தெரியல.. ரொம்ப நேரம் ஆனா என்னையும், ஜிம்மியும் சேர்த்தே அப்பா திட்டு வாங்க..
தமிழ்நாடு - கேரளா border -ல வீடு இருப்பதால் மழைக்கு பஞ்சம் இல்லை. ஆனால் படிச்சது, வேலை பார்ப்பதெல்லாம் சென்னை தான்.
எத்திராஜ் காலேஜ்ல Bsc computer science படிச்சேன். முடிச்ச உடனே எனக்கு கல்யாணம் பண்ணிடனும்-ன்னு அப்பாக்கு விருப்பம்..
ஆனா நானும் மாது அங்கிள்-லும் சேர்ந்து அப்பாவோட மனசை மாத்திட்டோம்..
"அம்மு(அமுதின் செல்வி) வேலைக்கு போகட்டுமே"ன்னு மாது அங்கிள் அப்பாகிட்ட சொன்னங்க இல்லை கெஞ்சினாங்கனே சொல்லலாம்..

இதெல்லாம் நடந்து ரெண்டு வருஷம் ஆகுது.
இனி..



(Picture : Thanks to Sam)

Wednesday, March 9, 2011

எச்சில் வெள்ளத்தில்...


எச்சில் வெள்ளத்தில்
ஹய்ஸ்டைலில் எடுத்த உடை அணிந்து
ரீபோக் ஷுவுடன்
நாற்றம் நாசியில் ஏறாதிருக்க
ஸ்ப்ரே அடித்து அலைய போகிறோம்...

இவனுக்கு ஏன் கவலை
அவன் காரில் போவன்...


(படம் - திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் எடுத்தது..)

Saturday, February 19, 2011

வாழ்க்கை ரொம்ப அழகா இருக்கு

அதிகாலையில் வேலைக்கு போகும் போது குப்பை சென்னையும் சொர்க்கம் மாதிரி இருக்கு. நீங்க 7 மணிக்கு எழுந்துகரவங்களா இருந்தா ஒரு நாள் ஆச்சு கொஞ்சம் சீக்ரம் எழுந்து உலகத்த ரசிங்க. இல்லன்னா வாழ்கைல ஏதோ ஒன்றை மிஸ் பண்ணறிங்கன்னு அர்த்தம்.

"The Lucky One" நாவல் Nicholas Sparks எழுதினது படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப நல்லா இருக்கு.. டைம் இருந்தா படிங்க. ஒரு மனுஷன், ஒரு போட்டோ ல இருக்கற பெண்ணைத் தேடி போகிறான். எப்படி அவன் கையில் அந்த போட்டோ கிடைக்குது, ஏன் அவளைத் தேடறான், அவளை எப்படி பார்த்தான். பார்த்த அப்புறம் என்ன ஆகுது என்பது தான் கதை. ம்ம்.. எப்படி சொல்றது.. புல்லாங்குழல் இசை போல அழகா அலை அலையா போகுது கதை..

சரவண பவன் டீ பிடிக்குமா உங்களுக்கு?
நைட் ஷிபிட் போனதில் இருந்தது அது நான் விசிறி ஆகிவிட்டேன்.
செம ஸ்டைலா டீ போடுவாருங்க அங்க வேலை செய்றவரு.
எத்தன ஸ்பூன் டீ தூள் போடுறாரு, சக்கரை போடறாருன்னு நானும் எண்ண ட்ரை பண்ணுவேன் ஆன முடியல, டக் டக் டக் ன்னு போட்டுடறாரு, அட்லீஸ்ட் அவராச்சு கணக்கு வெச்சி பாரான்னு தெரியல...


(எதாவது எழுத்து பிழை இருப்பின் மன்னிக்கவும்.. :))

Monday, January 17, 2011

எல்லாம் இருந்தும் ...

புத்தாடை போட்டுகிட்டு,
பக்கத்துக்கு வீடு, எதிர் வீடு என எல்லார் வீட்டுலையும் காட்டி...
தேடிபோய், உமா அம்மா என் புது டிரஸ் நல்லா இருக்கான்னு காட்டி
அம்மாவோட புது சேலையும் நானே கட்டிக்கிட்டு, தத்தித்தத்தி போய் மறுபடி காட்டினா
வாய் நிறைய சிரிப்போட, உனக்கு தான் நல்லா இருக்கு கனின்னு சொல்லுவாங்க..
இது ஒரு நிலை..

எதுக்கு தாத்தா இன்னொரு டிரஸ்?
இல்ல கனி, அம்மா எடுத்து தந்தது இன்னும் தெக்கலைல அப்புறம் ஸ்கூல்க்கு எதை போட்டுபோவ நாளைக்கு...
அதான் ரெடிமேட் சுடி ஒன்னு வாங்கியாந்தேன்.
சிரிச்சிகிட்டே டிரஸ் வாங்கிகொண்டு ஓடியது ஒரு நிலை...

என்ன.. கனி அக்கா புது டிரஸ் போடலையா?
இல்லமா இன்னும் தைக்க குடுக்கல...
சரி சரி...
இது ஒரு நிலை...

யோசிச்சு பார்த்தா...

போட்டுக்காட்ட உமா அம்மா இல்ல,
போட்டுக்கிட்டு போக பள்ளியும் இல்ல,
வாங்கி தர தாத்தாவும் இல்ல...

..............................

இந்த முறை கோலம் போடவே ஒரு நாள் லீவ் போட்டு ஊருக்கு வந்தாச்சு...
ஆனா வேலை நிறைய இருக்கவே நல்லா வெயில் வந்த அப்புறம் தான் போட்டோ எடுக்க முடிஞ்சுது..




...................................



மேல அந்த பக்கமா போஸ் குடுத்துட்டு இருக்கிறவர் தான் எங்க ஹீரோ... ரொம்ப வாயாடிங்கனா உங்கள காமெடி பீஸ்-ஆ ஆக்கிடுவாரு...
இந்த முறை பொங்கல் ரொம்ப சந்தோஷமா போக இவர் தான் ஒரு பெரிய காரணம்..
பெயர் இலக்கியன், சித்தப்பா மகன்(என் தம்பி)..