Monday, April 26, 2010

நாமும், அணுக்கருவும்...

ஏப்ரல் 26,
Chernobyl Day,

சிலருக்கு நினைவு இருக்கலாம். சிலர் மறந்து போயும் இருக்கலாம். எனக்கு இந்த வருடம் தான் 1986 - ல்
Chernobyl - ல் நடந்த பெரிய அணுக்கரு விபத்தை பற்றித் தெரிய வந்தது. மேலும் கடந்த வாரம் discovery channel - ல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம், இந்த விபத்தை பற்றியும், அதனால் இன்றளவும் ஏற்பட்டு வரும் நோய்கள் பற்றியும், இனி என்ன நடக்கும் என்பது பற்றியும், மிகத் தெளிவாய் சொல்லி இருந்தார்கள்.

You tube -ல் இருக்கும் இந்த சுட்டியையும் பார்க்க.

Chernobyl - ல் அணுக்கரு விபத்து நடந்து முடிந்த மூன்றாம் நாள் தான் செய்தியை வெளியில் விட்டு இருக்கிறது அப்போது இருந்த ஐக்கிய சோவித் ரஷ்ய அரசாங்கம். ஏகப்பட்ட பொய்களை அள்ளி வீசி இருக்கிறார்கள். " அணுக்கரு சக்தி மனித சக்தியை மீறிவிட்டது", என்று எளிமையாய் சொல்லிவிட்டார்கள். ஆனால் அந்த விபத்தினால் வெளியேற்றப்பட்ட கதிரியக்க caesium-137, strontium-90 , iodine, மற்றும் plutonium ஆகிய தனிமங்களின் ஐசோடோப்க்கள் இன்றளவும் மக்களை பாதித்து வருகிறது.

ஹிரோஷிமா, நாகசாகியில் எற்படுத்தப்பட்டதை போல 100 மடங்கு கதிர்விச்சு.
சாதரணமாக, ஒரு கையடக்க கதிரியக்க அளவுகோளானது அதிகபட்சமாக 4 roentgens per hour வரை கணக்கிடுமாம். ஆனால்
Chernobyl -இன் மேற்கூரையில் மட்டும் கதிரியக்கத்தின் அளவு 2,000 and 15,000 roentgens per hour என்று இருந்தது அப்போது.

தொடர்ந்து கதிரியக்க தனிமங்கள் வெளியேற்றப்பட்டு கொண்டே இருந்ததால், அந்த அணுக்கரு உலையின் மேற்புறத்தில் ஒரு தடுப்பு சுவர் போன்ற அமைப்பை கட்ட எண்ணி ரோபோட்டுக்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். ஆனால் கதிரியக்கத்தின் விளைவால் ரோபோட்டுகளும் செயல் இழக்கவே, ராணுவ வீரர்கள் கொண்டு 200m அளவுள்ள காண்க்ரீட் கூரையை 1989 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டதாம்.

You tube Video வில் இருவர் முகமூடி போட்டுகொண்டு எதையோ அள்ளி கீழே வீசுவதைப் பார்க்கலாம். அவர்கள் தான், பயோரோபோட்டுகள் (Bio Robots ) என்று அழைக்கப்பட்ட ராணுவ வீரர்கள் (அனைவருமே 20 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் என்பது கவனிக்கவேண்டிய ஒன்று).

அது தான் கூரையின் மேற்புறம், அவர்கள் கையாளுவது மணிக்கு 2000 ரோஜெங்களை வெளியிடும் கிராபைட் துகள்கள். அளவுக்கு அதிகமான கதிர்வீச்சின் காரணமாக, மனிதர்கள் 40 நொடிகள் மட்டுமே அங்கே இருக்க முடியும், அதுவும் 30 கிலோ எடை கொண்ட ஈயத்தால் ஆன பாதுகாப்பு உடையுடன் மட்டுமே போக முடியும்.

ஆகவே இந்த வேலையையை செய்து முடிக்க மட்டும் சுமார் 6,00,000 பயோரோபோட்டுகள் பயன்படுதப்பட்டனர். பின்னர் அத்தனை பேரும் கதிரியக்கத்தின் தாக்கத்தால் நோய்வாய்ப்பட்டனர்.

24 வருடம் கழித்து அவர்களில் இன்று 1,50,000 பேர் மட்டுமே உயிரோடு இரு
க்கின்றனராம்.

எஞ்சி இருப்போருக்கு உரிய ஊதியம் கூட வழங்கவில்லை அந்த நன்றயுள்ள அரசு.
உண்மையில், இன்றளவும் இத்தகைய கதிரியக்கத்தினால் ஏற்படும் மனித உயிர் இழப்புகளின் எண்ணிக்கை மறைக்கப்பட்டு வருகிறது.

2005 யில்
Chernobyl ஐ green peace குழு ஒன்று ஆராய சென்ற போது ஒருவர் குறிப்பிட்டு உள்ளார்.

" Today I learned that the radioactive material still in the reactor can blow up any second. " என்று.

" அணுக்கரு கதிர்விச்சு பிரளயம்" யோசிக்கவே பயமாக இருக்கிறது.


விபத்து ஏற்பட்டதன் காரணம் அனுபவம் இல்லா ஊழியர்கள் என்று சொல்லபட்டாலும், வருங்காலத்தில் இப்படி ஒரு கோர விபத்து ஏற்படாமல் இருக்க, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அவ்வபோது உறுதி செய்ய வேண்டும்.

கதிரியக்க கழிவுகள் பற்றி பெரும்பாலும் பலருக்கு தெரியும் என்று நம்புகிறேன். நேரம் இருப்பின் நம்ம கல்பாக்கத்தை பற்றிய இந்த செய்தி தொகுப்பையும் படிக்க வேண்டுகிறேன்.

உலகத்தில் தேவைப்படும் மின்சாரத்திற்கு நாம் பெரிதளவில் இந்த அணுக்கரு உலைகளையே நம்பி இருகின்றோம்.

நேற்று " நீயா நானா" வில் சொன்னது போன்று "ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்பின் போதும் அழிவுகள் இருக்கத்தான் செய்யும்" .

வேறு ஒருவர் வலியில், நாம் நம் அறைகளுக்கு குளிரூட்டிக் கொண்டு இரு
க்கின்றோம்.

இத்தனை அபாயங்களுக்கு நம்மையும், வரப்போகும் நம் தலைமுறையினரையும், உட்
படுத்திக்கொண்டு பெறப்படும் மின்சாரத்தை, மிகச் சிக்கனமாய் பயன்படுத்துவோமாக (என்னையும் சேர்த்தே)...

Friday, April 23, 2010

sms -ல் வைரஸ்


வழக்கமாய் வரும் கனவுகளை போல் இல்லாமல், போன வாரம் ஒரு வித்தியாசமான தொழிற்நுட்ப கனவு.
;)

வைரஸ்.

அதுவும் sms ல் வைரஸ்.

என்னோட மொபைல்க்கு ஒரு மெசேஜ் வருது, என்னதுன்னு ஓபன் பண்ணா, வைரஸ் ஆக்டிவேட் ஆய்டுச்சி. அதுவே தன்னால contacts ல இருக்கின்ற எல்லா நம்பர்களுக்கும், forward பண்ணிக்குது. மொத்தத்தில் கையிருப்பு அதாங்க balance காலி.

இந்தமாதிரி வைரஸ் உருவாக்கம், sms ல் தற்போது சாத்தியமில்லை என்றாலும், வருங்காலத்தில் உருவாக்கபடலாம்.
;)

ஆனால், மொத்தம் மெசேஜ் சைசே 140 அல்லது 160 பிட்ஸ் தானே... அது எப்படி வைரஸ் வர முடியும்???
அதுமட்டும் இல்லாம , ஒரே நேரத்துல 10 பேருக்கு மேல மெசேஜ் அனுப்ப முடியாது. லாஜிக் இடிக்குதே.........
???
??
?


எதுவுமே நடக்கலாம்... :-)

Thursday, April 15, 2010

கைவிடப்பட்ட கைத்தறிகள்


திடீரென்று என்ன... கைத்தறி பற்றி எல்லாம்...??

நெசவு குடும்பத்தில் பிறந்த நான் பேசாமல் யார் பேசுவது....

ஆம், அம்மா வீட்டில் பட்டு நெசவு, அப்பா வீட்டில் லுங்கி நெசவு.

பட்டு நெசவை நான் பிறப்பதற்கு முன்பே கைவிட்டுட்டாங்க. நான் வளர்ந்தது எல்லாம் லுங்கி நெய்யும் சப்தத்துடன் தான்.

ஓரளவிற்கு நல்ல வருமானத்தை தந்த கைத்தறிகளை கைவிட முக்கிய காரணம், விசைத்தறிகளின் வரவு. ஒப்புக் கொள்ள வேண்டிய ஒன்று, விசைத்தறிகளின் மூலம் குறைந்த நேரத்தில் அதிக உற்பத்தி செய்ய முடியும். ஆகவே அதன் ஆதிக்கம் கைத்தறி நெசவாளர்களுக்கு மூலப்பொருட்கள் கிடைக்க விடாமல் செய்தது.

கொஞ்சம் கொஞ்சமாய் நெசவாளர்கள் மாற்று தொழிலை தேடினர். ஒரு காலத்தில் அதாவது நான் ஆறாவது படிக்கும் போது, காலையில் சைக்கிள் ஓடிக்கொண்டு எங்கள் தெருவினை எளிதாக கடந்து விட முடியாது. தெருவின் இரு புறங்களிலும் பாவு போடப்பட்டு இருக்கும்.
ஆனால் இன்று, கடப்பாரையின் தடம் மட்டுமே எஞ்சியுள்ளது.

அதிஷ்டவசமாய் எங்கள் பகுதி ஸ்ரீபெருமந்தூர் மற்றும் ஓரகடம் SIPCOT (State Industries Promotion Corporation of Tamil Nadu ) - இதற்கு பக்கமாய் இருக்கவே, வேலைவாய்பிற்கு குறைவில்லை.

கைத்தறி இருந்தவரை மக்கள் ஒருவருக்கொருவர் தோழமையாய் இருந்ததாய் எனக்கு ஒரு உணர்வு. அப்போது ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்ததால் அப்படி தோன்றியதோ தெரியவில்லை. ஆலைக்காரம்மா, பாவு தோய்த்து தருபவர், நூல் இழைபவர்கள், வீட்டில் தறி நெய்பவர்கள், பாவு போடுபவர்கள், என பல பேருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது.

ஆனால் இன்று, என் ஊர் முற்றிலும் நகரமயமாக்கப்பட்டு உள்ளது. ஷிபிட் முறையில் எல்லாரும் வேறு வேறு வேலைக்கு செல்வதால் தோழமைக்கு நேரமில்லை. தெருக்களும் வெற்று சிமெண்ட் சாலைகளாய் காட்சியளிகிறது.

மாற்றங்கள் எங்கள் வீட்டு தறிக்கூடங்களையும் விட்டு வைக்கவில்லை. அனைத்து உபகரணங்களையும், விற்றுவிட்டார் எங்கள் சித்தப்பா. கரணங்கள் நிறையவே உண்டு. மேலே சொன்னதுபோல பாவு வரவு தட்டுப்பாடு, தாத்தாவை ஓய்வு பெற செய்ய, என சொல்லிக்கொண்டே போகலாம்.

எது எப்படி இருப்பினும், தறிக்குழியினுள் மண் அள்ளி போட்டவுடன் என் தாத்தாவின் கண்களில் இருந்து வழிந்த நீர் மிகவும் வலியுடையது. 'இனி நாம் பயன்படமட்டோமோ' என்ற ஒரு உணர்வை ஏற்படுத்தி அது அவரை மேலும் முடக்கியது. ஆனால் இது அவருக்கு ஓய்வு தேவைப்படும் வயது என்பதை, மெல்ல புரியவைத்தார் என் சித்தப்பா.

இந்த மாற்றங்களால் பெரும் பயன் பெண்களுக்கே என்று சொல்லலாம். ஏனெனில், அச்சு பிணைப்பதிலும், நூல் இழைப்பதிலும் கிடைத்த வருமானத்தைவிட இப்போது நல்ல வருமானத்தில் வேலைசெய்கிறார்கள்.

ஊரில் முன்பு இருந்ததைவிட 4 மடங்கு மக்கட்த்தொகை பெருகிவிட்டது. புலம் பெயர்ந்த மக்களே அதிகம். எங்கு பார்த்தாலும் வடமாநிலத்தோர். கூடவே சுற்றுசுழல் மாசுபாடும் அதிகமாகிவிட்டது. சும்மா இருந்த தறி கூடத்தை, "நாளு செவுரு எழுப்பினா வாடகைக்காவது விடலாம் " என்ற யாருடைய யோசனையோ, உருவம் பெற்றது.

எங்கள் தறிக்கூடத்தில் எனக்கென ஒரு ஊஞ்சல் இருக்கும். என்னுடைய விடுமுறை தினங்களில் பெரும்பாலும் அங்கு தான் இருப்பேன். நான், தம்பி, வசந்தி, நித்தியா, காயத்திரி என எல்லோரும் விளையாடுவோம்.

எங்களை தன் உஞ்சளால் தாங்கி தாலாட்டிய எங்கள் தறிக்கூடம் முற்றிலும் தடம் இன்றி சிதைந்ததுவிட்டது.

" இது வரவேற்கதக்க மாற்றமா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் முழுவதுமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மாற்றம்."

எனக்கு என்ன வருத்தம் என்றால், முன்பு என் ஊரார் எல்லோரும் முதலாளிகளாய் இருந்தனர். ஆனால் இப்போது, ஏதோ ஒரு தொழிற்சாலையில் கூலிகளாய் இருகின்றனர். என்னால் தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
பொங்கல், தீபாவளி போல பண்டிகை நாட்கள் என்றால் விடியற்காலை எல்லாம் தறி சப்தம் கேட்கும்.

ஆனால் இன்று,............... :-)

Saturday, April 3, 2010

துள்ளி எழுந்திடடி, என் தேவதையே...


























துள்ளி
எழுந்திடடி, என் தேவதையே
நின்னைச் சுற்றி இருக்கும் முட்டாள்களுக்கு,
நீ யார்ரென புரியவைப்போம்.

நீ சோர்ந்து இருப்பதனால்,
இந்த சோலையும் சோர்ந்ததடி.

அஞ்சி இராதே, - நீ
இப்புவி ஆளபிறந்தவளடி.

மதி மயங்காதே, - நின்னால்
பல மாற்றங்கள் வரவேண்டுமடி.

பாரதி பெற்றவளே, - நீ
துயர்கொள்ளல் ஆகுமோ?

இறக்கை விரித்திடடி, - உந்தன்
கனி காத்திருக்கிறாள்.




( ஓவியம் - நன்றி ஸ்வேதா )