Friday, July 9, 2010

டியர் ஜான் (2010)

வாழ்க்கையின் சில நேரங்களில் பிரிதல் தவிர்க்க முடியாததாய் இருக்கும். உளமார நேசிக்கும் இருவர் பிரிந்து இருப்பதை காட்டிலும் மனதை வருத்தும் விஷயம் எதுவும் இருக்காது அவர்களுக்கு. அப்படி பிரியும் போது இருவரும் தமது நேசத்தை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்கள் என்பது கவிதை. அக்கவிதையை பற்றிய படம் தான் Dear John (2010). இது Nicholas Sparks என்பவரின் நாவலில் இருந்து படமாக்கப்பட்டுள்ளது.

படத்தைப் பார்க்கவேண்டும் என்று முன்பே நினைத்திருந்தால் இத்தோடு நிறுத்திக்கொண்டு டவுன்லோட் செய்யவும். படத்தை பற்றி அறியாதவர்களுக்கு.....






John (Channing Tatum) மற்றும் Savannah Lynn Curtis (Amanda Seyfried) . John அமெரிக்க இராணுவத்தில் சேவை செய்பவன், Savannah கல்லுரி மாணவி.

Savannah வின் பக்கத்து வீட்டு நண்பர்கள் Randy மற்றும் Tim . Randy Savannah வினை ஒரு தலையாய் காதலிக்கிறான். Tim மிற்கு Allen என்னும் மகன் இருக்கிறான். Alan ஆட்டிசதினால்(Autism) பாதிக்கப்பட்ட சிறுவன். Alan னின் தாய் அவர்களுடன் இல்லை. யாரிடமும் அதிகம் பேச கூச்சப்படும் allen னிற்கு, savannah என்றால் பிரியம்.

John னின் தந்தை வயதானவர், மிகவும் அமைதியானவர், சிறப்பான நாணயங்களை சேகரிப்பதிலும், அவற்றை ஆராய்வதிலும் மிகுந்த நாட்டம் உடையவர். வெளி உலகத்தில் இருந்து தன்னை துண்டித்து கொள்ளும் எண்ணம் உடையவர்.

விடுமுறையில் கடற்கரையில், ஒரு ரம்யமான மாலை பொழுதினில் John னும் Savannah வும் சந்திகிறார்கள். சில நாட்களில் நட்பு, காதலாகிறது. John னின் தந்தையை பார்க்கவேண்டும் என்கிறாள் Savannah. அந்த சந்திப்பின் போது தான் பாதுகாத்து வைத்து இருக்கும் அறிய நாணயங்களை பற்றியே பேசுகிறார் அவனின் தந்தை.

ரண்டு வார விடுமுறை முடியும் தருவாயில் உள்ளது. அடுத்தநாள் savannah கல்லூரி விடுதிக்கு செல்ல வேண்டும். Savannah வினை சந்திக்க John கடற்கரைக்கு வருகிறான். பிரிவினை நினைத்து இருவரும் வருந்துகிறார்கள். திரும்பி நிச்சியம் வருவேன் என சத்தியம் செய்கிறான் John. Savannah ஏதோ சொல்ல விழைந்து இறுதியில் John னின் தந்தை மற்றவர்களை விட மாறுபட்டு இருப்பதையும். alan னைப் போல் அவரும் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறுகிறாள். John மிகுந்த கோபம் கொள்கிறான், அந்த இடத்தை விட்டு நகருகிறான். கடற்கரையில் நக்கலடிக்கும் Randy மற்றும் Tim மையும் அடித்து விடுகிறான்.

டுத்தநாள் savannah விடம் மன்னிப்புக் கேட்க அவளின் வீட்டிற்கு செல்கிறான். வீடு பூட்டியுள்ளது. அவள் சென்றுவிட்டதாய் சொல்கிறான் Tim . தான் சொல்லுவதை Savannah விடம் சொல்லிவிட முடியுமா என கேட்கிறான். Tim இசையவே John ஏதோ சொல்ல வருவான், ஆனால் வார்த்தைகள் வெளியில் வராது. Tim ஒரு பேப்பர் தந்து அதில் எழுதி தர சொல்லுவான். முதல் கடிதம்.

John தன் வீட்டிற்கு செல்கிறான் அங்கு அவன் தந்தை, தான் Savannah விற்கும் சேர்த்து சமைத்து இருப்பதை சொல்கிறார். அவள் வரமாட்டாள் என்கிறான் John சோகமாக. தந்தை ஒரு பார்வை பார்க்கிறார். வெளியில் கார் வரும் சப்தம் கேட்கிறது. எட்டிப்பார்த்தால் Savannah கையில் John னின் கடிதத்தோடு நிற்கிறாள். ஓடிச் சென்று கட்டியணைத்து முத்தமிடுகிறான் John . Savannah , தான் நேற்று கூறியதற்கு மன்னிப்புக் கேட்கிறாள். John , தான் அவ்வாறு கோபப்பட்டு இருக்ககூடாது என்பதைச் சொல்லி மன்னிப்புகேட்கிறான்.

Savannah , john னிற்கு ஒரு கடிதம் தருகிறாள். அவள் சென்ற பின்னர் படிக்கவேண்டும் என்கிறாள். பிரியாவிடை பெற்று செல்கிறாள். John னும் அவன் பணிக்கு திரும்புகிறான். Savannah கடிதத்தில் கூறி இருப்பதாவது, John மனதில் நினைக்கும் அனைத்தையும், அங்கு நடக்கும் ஒவ்வொன்றையும் மறைக்காமல் அவளுக்கு கடிதம் எழுதுமாறு வேண்டுகிறாள்.
John னின் இரண்டாம் கடிதம் போர்க்களத்தில் இருந்து,

Dear Savannah,

I promise you i will see you soon then. I promise i will write everything. I promise you, i will tell everything..................
.
.
Everything around me makes me missing you........



:) ஒவ்வொரு வரியும் அவ்ளோ அழகா இருக்கும். அந்த இசையின் பின்னணியில் கேட்டுபாருங்க, ரொம்ப நல்லா இருக்கும்.
அத்தனையும் அன்பு, அளவில்லா அன்பு... அவளும் பதிலுக்கு கடிதம் எழுதினாள், அவனின் தந்தையை சென்று பார்த்து வந்ததைச் சொல்லி பின் அவரின் மிகவும் விருப்பமான mule coin னின் பின்னணியினை கேட்பாள். அவனும் பதில் அளிப்பான் அது ஒரு முறை John சிறியவனாக இருக்கும் போது கிடைத்ததாகவும், பெறும் மதிப்பு கொண்ட அந்த நாணயத்தை விற்க மனமில்லாமல், அதில் இருந்தது தான் தன் தந்தையின் நாணய சேகரிப்பு ஆரம்பித்ததையும், காலபோக்கில் இவனுக்கு அதில் ஈடுபாடு குறைந்ததையும் சொல்லுவான்.

நாட்கள் நகர்ந்தது. செப்டம்பர் 11 தாக்குதல் நடைபெறுகிறது. அதன் தொடர்ச்சியாய் John னின் கமாண்டோ ஆப்கானிஸ்தான் செல்லவேண்டும் என்பதையும், மனைவி இருப்பவர்கள் யோசித்து கூறலாம் எனவும் சொல்லுகிறார். அந்த வார இறுதியில் இரண்டு நாட்கள் விடுமுறை கிடைகிறது. முதன்முதலாய் பிரிவிற்கு பின் இருவரும் சந்திக்கிறார்கள். விமான நிலையத்தில் John னை கண்டதும் தடுப்புகள் உள் நுழைந்து வந்து கட்டியனைகிறாள். அப்பொழுது ஒரு போலீஸ் அந்த பக்கம் என கைகளை காட்டுவது அழகு. :)

விடுமுறையில் John , savannah வின் பெற்றோர்களை சந்திக்கிறான். பேச்சுவாக்கில் ஆப்கானிஸ்தான் செல்ல விருப்பதன் நிலை பற்றி பேசுகிறார்கள். தன்னிடம் கேட்காமல் முடிவு எடுத்ததை பற்றி வருந்துகிறாள் Savannah . அப்போது John சொல்லும் வசனங்கள் அருமை. அதை தொடர்ந்து வரும் " Cut the bond with the moon....." என்ற பாடலின் இசை அவ்ளோ அழகு. பாடலின் முடிவில் Savannah வின் கண்ணீர்... விவரிக்க முடிய சோகம் அது.

மீண்டும் விரைவில் சந்திப்பதாய் விடை பெறுகிறான் John ... அதற்கடுத்து வரும் "This is the thing...... " பாடல் மிகவும் நன்றாக இருக்கும். fink இன் குரலும், அதை காட்சியமைக்கபட்ட விதமும் அழகு. இந்த கடிதம் ஒன்று தான் என்னை உயிரோடு வைத்திருக்கிறது என்று அர்த்தம் தரும் அப்பாடலின் வரிகள் இங்கே...

I don't know if you noticed anything different
It's getting dark and it's getting cold and the nights are getting long
I don't know if you even noticed at all
That I'm long gone baby, I'm long gone

And the things that keep us apart keep me alive and
The things that keep me alive keep me alone

This is the thing

I don't know if you notice anything missing
Like the leaves on the trees or my clothes all over the floor
I don't know if you'll even notice at all
Coz I was real quiet when I closed the door

And the things that keep us apart keep me alive and
The things that keep me alive keep me alone

This is the thing

I don't know if you notice anything different
I don't know if you even notice at all
I don't know if you notice anything missing

This Is The Thing
This Is The Thing

.......

சி வாரங்களாய் Savannah விடம் இருந்தது எந்த கடிதமும் வரவில்லை. ஒரு நாள் அவளுக்கு தொலை பேசியில் முயற்சிக்கிறான் John . ஒருவரும் எடுக்கவில்லை. அடுத்த காட்சியில் பராஷுட் கிழே விழுகிறது. அவன் மனம் உடைந்ததை தெரிவிக்க என்று நினைக்கிறேன்.

பின்பு ஒரு நாள் ஒரு கடிதம் வருகிறது John னிற்கு, அது "Dear John Letter" அதாவது காதல் முறிந்து விட்டது என்பதை காதலி, காதலனிடம் தெரிவிக்கும் கடிதத்தை "Dear John Letter" என்பார்களாம்.

Dear John,

I know i can't wait you long, since i lost love you. I have been starring at this plain page for the last two hours, all of them being honest i have been starring for last two months. Please forgive me for what i about to say, i know this the hardest thing, i never had to do. My life without us has no meaning............

என நீளும் இக்கடிதத்தினை படித்துவிட்டு. அவள் அனுப்பிய அத்தனை கடித்தையும் எரித்துவிடுகிறான். John கடிதங்களை எரித்து கொண்டிருப்பதை பார்த்து வினவும் அவன் நண்பனிடம், அழுது கொண்டே She was engaged with some other guy என்று கூறுவது வலியிலும் வலியானது.

பின் என்ன நடந்தது என்பது பாதி கதை....
ஏன் அவள் வேறு ஒருவனை மணக்கிறாள்? என்ன காரணம்? பின் இருவரும் சேர்ந்தார்களா? என்பது கிளைமாக்ஸ்.

நான் ரசித்ததில் சில...

*** தந்தை இறக்கும் தருவாயில், அவருக்கு தான் எழுதிய கடிதத்தினை படித்து காண்பிக்கிறான் John . அதில் தன்னை ஒரு நாணயத்துடன் ஒப்பிட்டு கூறுவதும், முடிவில் Savannah வை இழந்ததை எண்ணி தன்னையும் அறியாமல் அழுவதும், அவனது தந்தை படுக்கையிலும் அவனை அனைத்து கொள்வதும்.... என்னனு சொல்லத் தெரியவில்லை, பாருங்கள் தெரியும்......

*** எப்போதும் I will see you soon then. என சொல்லி பிரியும் john , Savannah வினை திருமணத்திற்கு பின் சந்தித்து விடைபெறும் போது Good bye Savannah என்று கூறுவது வலியின் உச்சம்.

*** கடலில், மழை பெய்யும் நேரத்தில் நீந்திக்கொண்டே John அழும் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் பார்க்க அழகு. John அழுவதைத்தவிர.

*** ஒவ்வொரு முறையும், John "ம்ம்ஹும்ம்.." என்று சொல்லும் போது அவ்ளோ அழகாக இருக்கிறார். John னின் தந்தையின் நடிப்பு அருமை.

*** இசை, படத்தின் பிளஸ் மற்றும் "Think of me" என்ற பாடலின் வரிகளும் அழகு.

When you hear but you just don't listen
When you're looking but you just don't see
When you're thinking there's no rhyme or reason
Think of me
Think of me

When you're getting to the end of a hard day
And you're thinking it's a long way home
When you're thinking that you're just plain crazy
Because you're on your own
Think of me

Savannah வின் கடைசி கடிதத்தில் நீ எங்கு இருக்கிறாய் என்பதை தெரிந்துக்கொள்ளும் உரிமை கூட எனக்கு கிடையாது என சொல்கிறாள். என்ன நடந்தது என்பதையும் சொல்கிறாள். இனி John வருவதும் வராததும் அவனது விருப்பம். பின் என்னவாயிற்று?

முடிவினை பொறுத்தவரையில் நாவலில் ஒரு விதமாகவும், படத்தில் ஒரு விதமாகவும் சொல்லப்பட்டு உள்ளது.

நல்ல melodrama வகை படம். பார்க்கச் செய்த நண்பன் முரளி அவர்களுக்கு நன்றி... :) அவர் தான் என்னை எழுதவும் சொன்னது... :)

6 comments:

  1. woww....

    arumaiya solli irukkeenga...

    kandippa paarkanum..

    ReplyDelete
  2. உங்கள் விமர்சனம் அருமை கனிமொழி,
    படிக்க படிக்க, ஆர்வம் கூடுகிறது.
    விரைவில் இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன்..!

    அருமையான விமர்சனம்,
    சொல்லாடல் அருமை..!!

    Keep it Up!

    ReplyDelete
  3. john ஐ விட நீதான் அதிகம் அழுதிருப்பாய் என நம்புகிறேன்!

    காணாத படம்,என் கண்முன்னே விரிவதை காண்கிறேன்!
    எழுத்துக்களை காட்சி ஆக்குவது உன் வரிகளால் சாத்தியமாகிறது!

    அருமை தோழி!

    ReplyDelete
  4. Hm.. En mobilela padikka mudila.. Eluthelam onnu mela onnu over lap aagi oru madiri iruku..:-(

    ReplyDelete
  5. படத்தைப் பார்க்கவேண்டும் என்று முன்பே நினைத்திருந்தால் இத்தோடு நிறுத்திக்கொண்டு டவுன்லோட் செய்யவும். //

    ஓகேங்க, நான் டி.வி.டி. வாங்கி பார்த்து விட்டு வந்து மீதியை வாசிக்கிறேன்.

    ReplyDelete
  6. will catchup after watching the movie :)

    ReplyDelete