Tuesday, August 24, 2010

நின் பெயர் தான் என்னவோ?


இருள் வீசும் இவ்வேளையில், இல்லாத உன் கைகளை, பிடித்து நடப்பது பிடித்திருக்கிறது...

கடிகாரத்தின் சப்தம் கூட அச்சமூட்டும் இவ்வேளையில், நான் இருக்கிறேன் எனும் வாயற்ற நின் குரல் நம்பிக்கை ஊட்டுகிறது ...

கலங்கிய கண்களோடும், அடைக்கும் தொண்டையோடும், நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு
கணமும் நின் தொடுதலை உணர முடிகிறது..

நீ இல்லாமையை உணரும் போதெல்லாம், உருவம் அற்ற நீ, அருகில் அமர்ந்து தோளில் கை போடுகிறாய்...

இரவில், தனிமையில், இசையில் லயித்து இருக்கும் போது முழுவதுமாய் உணர்கிறேன் உன்னை...



நின் பெயர் தான் என்னவோ?
அன்பா?
நம்பிக்கையா?
கடவுளா?
தோழமையா?
தனிமையா?
அல்லது
ஒன்றும் இல்லாத ஒன்றா???

12 comments:

  1. அருமையான கவிதை..!!

    எனக்கு தெரிஞ்சி..அது அன்பு..அன்பு..அன்பு!!

    பதில் கிடைத்துவிட்டதா?

    ஆயிரம் பொன் எனக்குதானே?

    ReplyDelete
  2. அற்புதமான கவிதை...

    மிகப்பிடித்திருக்கிறது...

    ReplyDelete
  3. நின் பெயர் தான் "கவிதை"

    ReplyDelete
  4. ரசித்தேன் கனிமொழி.

    ReplyDelete
  5. அட... நல்லாயிருக்கே

    படம் கூடுதல் அழகு

    ReplyDelete
  6. கவிதையுமா! கலக்குறே கனி! பிரமாதம்...

    ReplyDelete
  7. சில நேரம் பெயர் தெரியாதவை(புரியாதவை) கூட ரசனையாகத்தான் இருக்கிறது.
    அழகான கவிதை, வாழ்த்துக்க‌ள்!

    ReplyDelete
  8. கவிதை நல்லா இருக்கு...

    ReplyDelete
  9. நல்லா இருக்கு...!
    நல்ல கவிதை..!

    ReplyDelete
  10. @@@@ரங்கன்
    அகல்விளக்கு
    ஜெரி ஈசானந்தன்.
    ஈரோடு கதிர்
    ப்ரின்ஸ்
    Priya
    Sriakila
    Sivaji Sankar
    அஹமது இர்ஷாத்
    லெமூரியன்...

    --- நன்றி :)))))

    ReplyDelete