Sunday, September 12, 2010

மெய் அல்ல...

ஒரு காலினை கோணலாய் வைத்து நின்றுகொண்டு
மறுகாலிற்கு ஓய்வு தந்து
பை பத்திரமாய் இருப்பதை உறுதி செய்து
மூச்சையும் கொஞ்சம் சிரமத்துடன் விட்டான்....

வந்தது அலைபேசி
"ட்ரெயின் ஏறிட்டேன் மா,
ஆங், இடம்லாம் கெடச்சிடுச்சு. உட்கார்ந்துட்டு தான் வரேன்,
சாப்டேன் மா.. நீ?
ம்ம்.. சரி... வெச்சிடவா? "




அழைத்தது அன்னை,
நிற்பது unreserved compartment ல்...

5 comments:

  1. //அழைத்தது அன்னை,
    நிற்பது unreserved compartment ல்... //


    இருவரிடமும் நிற்கிறது அன்பு

    ReplyDelete
  2. இருவரிடமும் நிற்கிறது அன்பு

    ReplyDelete
  3. அட ......நல்லா இருக்குபா...!

    ReplyDelete