Saturday, April 3, 2010

துள்ளி எழுந்திடடி, என் தேவதையே...


























துள்ளி
எழுந்திடடி, என் தேவதையே
நின்னைச் சுற்றி இருக்கும் முட்டாள்களுக்கு,
நீ யார்ரென புரியவைப்போம்.

நீ சோர்ந்து இருப்பதனால்,
இந்த சோலையும் சோர்ந்ததடி.

அஞ்சி இராதே, - நீ
இப்புவி ஆளபிறந்தவளடி.

மதி மயங்காதே, - நின்னால்
பல மாற்றங்கள் வரவேண்டுமடி.

பாரதி பெற்றவளே, - நீ
துயர்கொள்ளல் ஆகுமோ?

இறக்கை விரித்திடடி, - உந்தன்
கனி காத்திருக்கிறாள்.




( ஓவியம் - நன்றி ஸ்வேதா )

15 comments:

  1. சூப்பர் கவிதை..!!

    இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க கனிமொழி..!!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. /*அஞ்சி இராதே, - நீ
    இப்புவி ஆளபிறந்தவளடி.
    மதி மயங்காதே, - நின்னால்
    பல மாற்றங்கள் வரவேண்டுமடி.// ஆவலுடன் எதிர்பார்கிறோம்

    ReplyDelete
  3. அழகாக எழுதுகிறீர்கள் கனி ...

    வலைப்பக்கத்தின் கருப்பு பின் புலத்தக் கொஞ்சம் மாற்றியமையுங்கள் . படிக்கையில் உருத்துகிறது.

    இந்த நல்ல தொகுப்புக்கு ... ”உதிர்ந்த மலர்கள்” எனும் தலைப்பு எதற்காக வைத்தீர்கள் ..

    ReplyDelete
  4. //அஞ்சி இராதே, - நீ
    இப்புவி ஆளபிறந்தவளடி.//

    வாவ்.......

    அருமையான கவிதை...

    இதுபோல நிறைய எழுதுங்கள்...

    :)

    ReplyDelete
  5. பாரதி கண்ட புதுமைப் பெண். பார்க்க மகிழ்ச்சியாய் உள்ளது. கவிதையும், ஓவியமும் நிறைய சொல்கின்றன.

    ReplyDelete
  6. // பாரதி பெற்றவளே//
    ரசிக்க வைத்த வரி.

    ReplyDelete
  7. @ ரங்கன்

    // இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க கனிமொழி..!! //

    கண்டிப்பாக ரங்கா...
    நன்றிங்க எங்க பக்கம் வந்ததுக்கு :-)

    ReplyDelete
  8. @ Prince
    ///
    /*அஞ்சி இராதே, - நீ
    இப்புவி ஆளபிறந்தவளடி.
    மதி மயங்காதே, - நின்னால்
    பல மாற்றங்கள் வரவேண்டுமடி.// ஆவலுடன் எதிர்பார்கிறோம்
    ///

    ம்ம்ம்ம்.... நன்றி பிரின்ஸ்.

    ReplyDelete
  9. @ Sindhan R

    நன்றி சிந்தன்.
    கருப்பு பின் புலம் தானே, நல்ல template தேடிக்கொண்டு இருக்கிறேன் விரைவில் மாற்றிவிடலாம், சிரமத்திற்கு மன்னிக்கவும். :-)
    //இந்த நல்ல தொகுப்புக்கு ... ”உதிர்ந்த மலர்கள்” எனும் தலைப்பு எதற்காக வைத்தீர்கள் ..//
    என் மனசில் சில பூக்கள் பூக்கும்..சில என் மறதியாலோ, நேரமின்மையாலோ மனதிலேயே வாடிவிடும்..ஆனால் சில பூக்கள் மட்டும் இந்த பதிவுலத்தில் வந்து விழுவதால் “உதிர்ந்த மலர்கள்”.
    இது பேர் வைத்ததிற்கு அப்புறம் யோசிச்சது...
    :-)
    உண்மையான காரணம் என் நண்பர் மற்றும் குரு முரளிகுமார்.

    ReplyDelete
  10. @ அகல்விளக்கு

    நன்றி ஜெய்... :-)

    ReplyDelete
  11. @ விக்னேஷ்வரி

    நன்றி விக்னேஸ்வரி...
    உங்க ரசிகையாக மாறிக்கொண்டு வருகிறேன். :-)

    ReplyDelete
  12. @ மதுமிதா

    நன்றி மது...

    ReplyDelete
  13. பாரதியின் புதுமைப்பெண்ணாய் கவிதை சிறகு விரிக்கிறது....

    அருமை கனிமொழி!!!

    ReplyDelete
  14. பாரதி கண்ட புதுமைப் பெண் என்பது கவியிலும் தெரிகிறது....பூஸ்ட் கவிதை...

    ReplyDelete